மதுரையில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடுதலாக 1,000 படுக்கை வசதி!

 

மதுரையில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடுதலாக 1,000 படுக்கை வசதி!

தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,14,978 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,542 ஆக அதிகரித்துள்ளது.

மதுரையில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடுதலாக 1,000 படுக்கை வசதி!

மதுரையில் இன்று மேலும் 260 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அம்மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4640 ஆக உயர்ந்துள்ளது. சென்னைக்கு அடுத்ததாக மதுரையில் தான் கொரோனா பரவல் அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது.

மதுரையில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடுதலாக 1,000 படுக்கை வசதி!

இந்நிலையில் மதுரையில் 4,600 படுக்கை வசதிகள் உள்ள நிலையில் கூடுதலாக 1000 படுக்கை வசதிகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தோப்பூர் காசநோய் மருத்துவமனை வளாகத்தில் உள்ள காலி இடத்தில் தற்காலிக மருத்துவ மையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குழாய் இணைப்பு மூலம் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 1000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.