பேய்ஓட்டுவதாக கூறி 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; மந்திரவாதி போக்சோவில் கைது

 

பேய்ஓட்டுவதாக கூறி 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; மந்திரவாதி போக்சோவில் கைது

நாமக்கல்

ராசிபுரம் அருகே பேய் ஓட்டுவதாக கூறி 2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மந்திரவாதியை, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர்.

பேய்ஓட்டுவதாக கூறி 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; மந்திரவாதி போக்சோவில் கைது

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மங்களபுரம் பகுதியை சேர்ந்தவர் சேகர்(50). இவர் தாயத்து கட்டுவது, பேய் ஓட்டுவது உள்ளிட்ட மாந்திரீக வேலைகளை செய்து வருகிறார். இந்நிலையில், சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த அண்ணாதுரை – கோவிந்தம்மாள் தம்பதியினர், தங்களது இரு மகள்களுக்கும் பேய் பிடித்துள்ளதாகவும், அதனை விரட்டக் கோரியும் சேகரிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து, பேய் விரட்டுவதாக கூறி பூஜையை தொடங்கிய சேகர், பெற்றோரை சிறிதுநேரம் வெளியே காத்திருக்குமாறு கூறியுள்ளார். இதனால் அவர்கள் அறையிலிருந்து வெளியேறிய நிலையில், சேகர், சிறுமிகள் இருவரையும் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. நீண்டநேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த பெற்றோர் உள்ளே சென்றபோது, சிறுமிகள் ஆடைகளின்றி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அவர்களிடம் விசாரித்தபோது, மயக்க மருந்து கொடுத்து சிறுமிகள் இருவரையும் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

பேய்ஓட்டுவதாக கூறி 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; மந்திரவாதி போக்சோவில் கைது

இதுகுறித்து கோவிந்தம்மாள் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த மங்களபுரம் போலீசார் தனிப்படை அமைத்து சேகரை தேடி வந்தனர். இந்நிலையில், வீட்டில் பதுங்கியிருந்த சேகரை ரகசிய தகவலின் பேரில் கைதுசெய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த விவகாரம், குறித்து நாமக்கல் மாவட்ட குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் சிறுமிகளிடம் விசாரித்து வருகின்றனர்