’ஓ அந்த நாட்கள்’ OTTல் ரிலீஸா? ராதிகா பதில்
நிகழ்ச்சித் தொகுப்பாளர், இசையமைப்பாளர் என்பதிலிருந்து அடுத்த கட்டமாக ஜேம்ஸ் வசந்தன் இயக்குநாகும் படம் ‘ஓ அந்த நாட்கள்’
முழுக்க முழுக்க பெண்களை மையமாகக் கொண்ட கதையில், ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுஹாசினி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், சுலோச்சனா, ஒய்.ஜி.மகேந்திரா, மனோபாலா உள்ளிட்டோரும் இடம்பெறுகின்றனர். இசையமைத்து இயக்குகிறார் ஜேம்ஸ் வசந்தன்.
படத்தின் அநேக காட்சிகள் ஆஸ்திரேலியா நாட்டின் மெல்போர்ன் நகரில் படமாக்கப்பட்டிருக்கின்றன. கதையின் மையக் கரு நட்பு என்பதாக அமைக்கப்பட்டிருக்கிறதாம். படப்பிடிப்பு முடிந்த நிலையில் டப்பிங் வேலைகள் நடைபெற்றன.
கொரோனா லாக்டெளனால் இப்படம் ரிலீஸ் ஆவது எப்போது என்ற கேள்வி பலருக்கு எழுந்தது. ராதிகா சரத்குமாரின் ட்விட்டர் பக்கத்தில் உதயா என்பவர் இந்தப் படம் தியேட்டரில் வெளியாகுமா அல்லது OTT யில் ரிலீஸ் ஆகுமா? என்று கேட்டிருந்தார்.
அதற்கு பதில் அளித்த ராதிகா சரத்குமார், ’அந்த முடிவை தயாரிப்பு நிறுவனமே எடுக்கும்’ என்று கூறியிருக்கிறார்.
Production house will decide. https://t.co/2D4MjkqTP7
— Radikaa Sarathkumar (@realradikaa) July 23, 2020
ஓ அந்த நாட்கள் படத்தைத் தயாரிக்கும் மிராக்கிள் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே இதன் முடிவை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.