தமிழகத்தில் ஊரடங்கு நீடிப்பா? முதல்வர் ஆலோசனை!
Aug 26, 2020, 09:42 IST1598415134000
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தினமும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அத்துடன் இபாஸ் நடைமுறையில் தளர்வு அளிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் மற்ற மாவட்டங்களிலிருந்தும், சென்னையிலிருந்து மற்ற மாவட்டத்திற்கும் மக்கள் படையெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இபாஸ் முறையை ரத்து செய்யக்கோரி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி வரும் 29 ஆம் தேதி ஆலோசனை நடத்துகிறார். ஆகஸ்ட் 31 ஆம் தேதி ஊரடங்கு முடியவுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தும் முதல்வர் பழனிசாமி இதை தொடர்ந்து மருத்துவக்குழுவுடனும் ஊரடங்கு தொடர்பாக கலந்தாலோசிக்கவுள்ளார்.