புரெவி புயல்: பேருந்து சேவை நிறுத்தமா?- அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விளக்கம்

 

புரெவி புயல்: பேருந்து சேவை நிறுத்தமா?- அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விளக்கம்

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் சில மணி நேரங்களில் புயல் சின்னமாக மாற கூடிய நிலையில், பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அவசர ஆலோசனை நடத்தினார். மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் அதிகாரிகளுடன் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர் பி உதயகுமார், “புயல் சேத விவரங்களை ஆய்வு செய்ய வருகிற ஐந்தாம் தேதி மத்திய குழு தமிழகம் வருகின்றனர்.

காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்போது 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. 2-ஆம் தேதி முதல் புயலின் கோரத் தாண்டவம் உணரத் தொடங்கும். அது நான்காம் தேதி பாம்பன் குமரிக்கு இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது. புயலின் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடிய கன்னியாகுமரியில் இரண்டு தேசிய பேரிடர் மீட்பு குழுக்களும், தூத்துக்குடியில் மூன்று குழுக்களும், திருநெல்வேலியில் இரண்டு குழுக்களும், மதுரையில் இரண்டு குழுக்களும் ஆக மொத்தம் ஒன்பது குழுக்கள் போதிய பாதுகாப்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

புரெவி புயல்: பேருந்து சேவை நிறுத்தமா?- அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விளக்கம்

தமிழகத்துக்கு பக்கத்து மாநிலங்களிலும் மீனவர்களின் பாதிப்புகளை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படுள்ளது. ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களுக்கு தேவையான எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

புயல் வீசும் நேரத்திலும், புயல் வீசுவதற்கு முன்பும் அதாவது ஒன்றாம் தேதி முதல் நான்காம் தேதி வரை புயல் பாதிப்புகள் இருக்கக்கூடும் என்று அறிவித்த மாவட்ட மக்கள் யாரும் தேவையின்றி வெளியே வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். புயல் உருவான பின்னர் புயல் நகரும் திசையைப் பொறுத்து பேருந்து சேவையை நிறுத்துவது அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தி அறிவிப்பார்” எனக் கூறினார்.