சென்னை சூப்பர் கிங்ஸ் டீமில் தொடர்ந்து விளையாடுவரா தோனி? #IPL_Updates

 

சென்னை சூப்பர் கிங்ஸ் டீமில் தொடர்ந்து விளையாடுவரா தோனி? #IPL_Updates

மகேந்திர சிங் தோனி தனது ஓய்வை அறிவித்திருக்கிறார். அது கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் மூழ்கச் செய்துள்ளது. அப்படியென்ன தோனி ஸ்பெஷல் எனக் கேட்பவர்களுக்கு…

கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி ‘ஒருநாள் உலககோப்பை’ யை வென்று உலகைத் திரும்பிப் பார்க்க வைத்தது. இது நடந்தது 198 ஆம் ஆண்டில். அதன்பிறகு அசாருதீன், கங்குலி உள்ளிட்ட பல திறமையான வீரர்களின் தலைமையில் இந்திய அணி உலககோப்பை தொடரில் விளையாடியும் கோப்பையை வசப்படுத்த முடியவில்லை.

சென்னை சூப்பர் கிங்ஸ் டீமில் தொடர்ந்து விளையாடுவரா தோனி? #IPL_Updates

28 ஆண்டுகளுக்குப் பிறகு 2011 ஆம் ஆண்டு மஹேந்திர சிங் தோனியின் தலைமையிலான இந்திய அணி மீண்டும் உலககோப்பையை வென்று இந்தியாவுக்கு மேலும் பெருமை சேர்த்தது. இந்த வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாகச் சொல்லப்பட்டது தோனியின் கேப்டன் ஷிப். டி20 முதல் உலககோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டனும் மஹேந்திர சிங் தோனிதான்.

ப்ளூ ஜெர்சியோடு இனி தோனியைப் பார்க்க முடியாது என்பது பேரிழப்புதான். ஆனால், மஞ்சள் ஜெர்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் கலக்குவார் என்று நம்புவோம். ஆனாலும் சிலர் ஐபிஎல் போட்டியிலும் தோனி நீடிப்பாரா என்ற கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் டீமில் தொடர்ந்து விளையாடுவரா தோனி? #IPL_Updates

இந்தக் கேள்வி ரசிகர்களை இன்னும் வருத்தமுறச் செய்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகத் தலைவர் ’இந்தியா சிமெண்ட்ஸ்’ என்.சீனிவாசன் இது குறித்து பேசியிருக்கிறார்.

“தோனி தலைமையில் ஒருநாள் உலககோப்பையை வென்றிருந்தது இந்திய அணி. ஆனால், அதற்கு அடுத்து ஒரு தொடரில் இந்தியா தோற்றிருந்ததால் தோனியை கேப்டனிலிருந்து நீக்க முடிவு செய்திருந்தனர். நான்தான் குழுவிடம்  தோனியை கேப்டன்ஷிப்பிலிருந்து நீக்கக்கூடாது எனக் கண்டிப்புடன் கூறியதாக தெரிவித்திருக்கிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் டீமில் தொடர்ந்து விளையாடுவரா தோனி? #IPL_Updates

மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி விரும்புவரை ஆடலாம் என்று பச்சைக்கொடி காட்டியிருக்கிறார்.

இந்தப் பதிலால் தோனியின் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்கள்.