நாட்டு மக்கள் மத்தியில் பிரதமர் மோடி இன்று மாலை உரை!

 

நாட்டு மக்கள் மத்தியில் பிரதமர் மோடி இன்று மாலை உரை!

நாட்டு மக்களிடையே பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 6 மணிக்கு உரையாற்றுகிறார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் , “இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களிடம் ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ள உள்ளதாக ” அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது குறைய தொடங்கியுள்ளது. இதனிடையே மக்களின் நலனை கருத்தில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது.

நாட்டு மக்கள் மத்தியில் பிரதமர் மோடி இன்று மாலை உரை!

இருப்பினும் நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்கள் நெருங்குவதால் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற பிரதமர் அறிவுறுத்துவார் என்று கூறப்படுகிறது. அதே சமயம் கொரோனாவுக்கு தடுப்பூசி தயாராகி வருகிறது. எனவே இது குறித்த அறிவிப்பாக இருக்குமோ என்ற எண்ணமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சமீபத்தில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், சுகாதார அமைப்பு மற்றும் அதை காக்க வேண்டியது கடமை என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.