ஆஸ்திரேலியாவுக்கு ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா? – இன்று 3-வது T20 போட்டி!

 

ஆஸ்திரேலியாவுக்கு ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா? – இன்று 3-வது T20 போட்டி!

உலகின் நம்பர் 1 அணி என்று கொண்டாடப்படும் ஆஸ்திரேலிய அணி பரிதாப நிலைக்குச் சென்ரு கொண்டிருக்கிறது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளை ஆட திட்டமிட்டிருக்கின்றன இரு அணிகளும்.

ஆஸ்திரேலியாவுக்கு ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா? – இன்று 3-வது T20 போட்டி!

முதல் டி20 போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 162 ரன்களை எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணியால் 20 ஓவர்களில் 160 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.  இதன்மூலம்,  த்ரில் வெற்றியை ருசித்தது இங்கிலாந்து அணி.

இரண்டாவது டி20 போட்டியிலும் டாஸ் வென்றது ஆஸ்திரேலிய அணியே. ஆனால், சென்ற முறை போல் இல்லாது முதலில் பேட்டிங் எனத் தீர்மானித்தது.

ஆஸ்திரேலியாவுக்கு ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா? – இன்று 3-வது T20 போட்டி!

ஆரோன் பின்ச் 33 பந்துகளில் 40 ரன்களும், மார்கஸ் ஸ்டோனிஸ் 26 பந்துகளில் 35 ரன்களும் மேக்ஸ்வெல் 18 பந்துகளில் 26 ரன்களையும் எடுத்தனர். இதனால், 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை மட்டுமே எடுத்தது ஆஸ்திரேலிய அணி.

158 என்ற எளிமையான எடுத்துவிடக்கூடிய ஸ்கோரை நோக்கி ஆட்டத்தைத் தொடங்கியது இங்கிலாந்து அணி. அதிரடியாக விளையாடிய ஜோச் பட்லர் 54 பந்துகளில் 74 ரன்களைக் குவித்தார். அதேபோல டேவிட் மலன் 32 பந்துகளில் 42 ரன்களை எடுத்தார். மிச்சம் 7 பந்துகள் இருக்கும் நிலையில் 158 ரன்களை எடுத்து போட்டியையும் டி20 போட்டித் தொடரையும் வென்றது இங்கிலாந்து அணி.  

ஆஸ்திரேலியாவுக்கு ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா? – இன்று 3-வது T20 போட்டி!

தொடர்ந்து இரண்டு வெற்றிகளைப் பெற்றதால் டி20 தொடரையும் வென்றுள்ளது இங்கிலாந்து அணி. இன்றைக்கு டி20 போட்டித் தொடரின் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இதிலாவது ஆஸ்திரேலியாவுக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா என்று ஆஸ்திரேலிய ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.