குடியிருப்பு பகுதியில் இரவில் உலா வந்த காட்டுயானைகள்

 

குடியிருப்பு பகுதியில் இரவில் உலா வந்த காட்டுயானைகள்

கோவை மாவட்டம் தொப்பம்பட்டி அருகே குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் உணவு தேடி உலா வந்த காட்டுயானைகளால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்ட மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் உள்ளன.

குடியிருப்பு பகுதியில் இரவில் உலா வந்த காட்டுயானைகள்

அவைகளில் சில உணவு தேடி அவ்வப்போது மலை அடிவார பகுதிகளில் வெட்டப்பட்டுள்ள அகலிகளை தாண்டி, விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புக்குள் வந்து விடுகின்றன. இதன் காரணமாக விவசாய பயிர்கள் சேதமாவதுடன், அவ்வப்போது மனிதர்களை தாக்குவதும் தொடர் கதையாகிறது. காட்டு யானைகளை வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி விடுட்டாலும, அவை மீண்டும் மீண்டும் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது தொடர்கதையாக உள்ளது.

குடியிருப்பு பகுதியில் இரவில் உலா வந்த காட்டுயானைகள்

இந்நிலையில், கோவை மாவட்டம் தொப்பம்பட்டியை அடுத்துள்ள கதிர்நாயக்கன் பாளையம் ஸ்ரீலட்சுமிநகர் பேஸ் 3 பகுதியில் நேற்றிரவு 11 மணியளவில் உணவு தேடி 3 காட்டுயானைகள் புகுந்தன. அப்போது அந்த யானைகள், குடியிருப்புகள் நிறைந்த பகுதிக்குள் மிகவும் சர்வ சாதரணமாக நடந்துசெல்லும் காட்சிகள், அங்கிருந்த வீடு ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், யானைகள் நடமாட்டம் உள்ளதால், இரவு நேரங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குடியிருப்பு பகுதியில் இரவில் உலா வந்த காட்டுயானைகள்