குடியிருப்பு பகுதியில் ஒற்றை யானை உலா; வனத்துறை தீவிர ரோந்து

 

குடியிருப்பு பகுதியில் ஒற்றை யானை உலா; வனத்துறை தீவிர ரோந்து

ஈரோடு

பவானிசாகர் அணைப்பகுதியில் இரவு நேரங்களில் உலா வரும் ஒற்றை காட்டுயானையை கண்காணிக்க, வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகர் அணை பகுதியில் உள்ள பழத்தோட்டத்தில் கடந்த 2 நாட்களாக ஒற்றை காட்டுயானை இரவு நேரங்களில் உலா வருகிறது. மேலும் அந்த ஒற்றை யானை பூங்கார் காலனிக்கு செல்வதால், அங்கு வசித்து வரும் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

குடியிருப்பு பகுதியில் ஒற்றை யானை உலா; வனத்துறை தீவிர ரோந்து

இந்நிலையில் ஒற்றையானையை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதுகுறித்து பேசிய வனத்துறை அதிகாரிகள்,ஒற்றை யானை நடமாட்டம் கரணமாக பூங்கார் காலனியில் இரவு நேரங்களில் மக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். மேலும், ஒற்றை யானையை கண்காணிக்க இரவு நேரங்களில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.