காட்டுயானைக்கு தீ வைத்த விவகாரம் : டிக் டாக் சூர்யா மீது வழக்குப்பதிவு!

 

காட்டுயானைக்கு தீ வைத்த  விவகாரம் : டிக் டாக் சூர்யா மீது வழக்குப்பதிவு!

டிக் டாக் சூர்யா மீது மசினகுடி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

காட்டுயானைக்கு தீ வைத்த  விவகாரம் : டிக் டாக் சூர்யா மீது வழக்குப்பதிவு!

நீலகிரி மாவட்டம் மசினகுடியில் கடந்த 19ஆம் தேதி காட்டு யானைக்கு தீ வைத்ததில் யானை படுகாயமடைந்து இறந்து போனது. தனியா ரிசார்ட்டுக்கு சென்ற யானையை விரட்டும் முயற்சியில் அங்கிருந்த ஊழியர்கள் டயரை கொளுத்தி காட்டு யானை மீது வீசினர். இதில் காட்டு யானையின் உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டன. இதில் அதன் காது பகுதி துண்டானது . இதற்கான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இதை வன ஆர்வலர்கள் மட்டுமல்லாது, பொதுமக்களும் கடுமையாக கண்டித்து தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தினர்.

காட்டுயானைக்கு தீ வைத்த  விவகாரம் : டிக் டாக் சூர்யா மீது வழக்குப்பதிவு!

அந்த வகையில் திருப்பூரை சேர்ந்த டிக் டாக் சூர்யா என்பவர் மசினகுடியில் யானை இறந்தது குறித்து கண்டித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் மசினகுடி மக்கள் குறித்து பேசிய அவர், அந்த கிராம மக்களுக்கு குடிநீர், பால், மின்சாரம் எதுவும் விநியோகிக்கக்கூடாது என்று கூறினார். அத்துடன் மத மோதல்களை உருவாக்கும் விதத்தில் அவரது பேச்சு இருந்தது. இந்த வீடியோ இணையத்தில் பரவ தொடங்கிய நிலையில் இதுகுறித்து மசினகுடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் டிக் டாக் சூர்யா மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரை விரைவில் கைது செய்வார்கள் என்று கூறப்படுகிறது