“தூக்கத்திலேயே என் புருஷன தூக்குங்கடா” -கூலிப்படைக்கு உத்தரவு போட்ட பொண்டாட்டி.

 

“தூக்கத்திலேயே என் புருஷன தூக்குங்கடா” -கூலிப்படைக்கு உத்தரவு போட்ட பொண்டாட்டி.


குடும்ப சண்டையின் விளைவாக ஒரு மனைவியே கூலிப்படையிடம் பணம் கொடுத்து கணவரை கொன்ற சம்பவம் பலரை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது

“தூக்கத்திலேயே என் புருஷன தூக்குங்கடா” -கூலிப்படைக்கு உத்தரவு போட்ட பொண்டாட்டி.


கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 52 வயதான – முகமது ஹஞ்சலா என்பவர் தனது மனைவி சர்வரி பேகம் மற்றும் மகன் ரெஹ்மான் ஆகியோருடன் வசித்து வந்தார் .அவர் காலணிகள் தயாரிக்கும் தொழில் செய்து வந்தார் .இந்நிலையில் அந்த ஹஞ்சலாவுக்கும் அவரின் மனைவி மற்றும் மகள்களுக்குமிடையே அடிக்கடி குடும்ப சண்டை வந்துள்ளது .மேலும் அவர் தன்னுடைய மனைவி மற்றும் மகள்களின் நடத்தையில் சந்தேகம் கொண்டுள்ளார் .அதன் காரணமாக அவர்களுக்குள் கடும் மோதல் நிலவி வந்துள்ளது .
இந்த குடும்ப சண்டையால் அவரின் மகனும் ,மனைவியும் சேர்ந்து கொண்டு அவரை கொல்ல முடிவு செய்தார்கள் .அதனால் அவர்கள் ஒரு கூலிப்படையை சேர்ந்தவர்களிடம் பணம் கொடுத்து அவரை கொல்ல சொன்னார்கள் .
அதன் படி அந்த கூலிப்படையினர் பிப்ரவரி 10 ஆம் தேதி அதிகாலை 3:30 மணியளவில் அவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்தார்கள் .அதன் பிறகு அவர்கள் அவரை தலையணையால் அழுத்தி கொன்றார்கள் .பின்னர் அந்த மனைவி ஊரார் மற்றும் உறவினர்களிடம் இதய நோயால் கணவர் இறந்து விட்டார் என்று கூறி அடக்கம் செய்து விட்டார்கள் .அவர் இறந்து ஒரு மாதத்திற்கு பிறகு போலீசாருக்கு ஒரு மர்ம கடிதம் வந்தது .அதில் ஹஞ்சலாவை கொலை செய்து விட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது .அதன் பின்னர் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர்.அதில் தாய்-மகன் இருவரும் சேர்ந்து ஹஞ்சலாவைக் கொல்ல கூலிப்படையினரை வேலைக்கு அமர்த்தியுள்ளனர் என்பது தெரியவந்தது.பின்னர் போலீசார் இந்த கொலை சம்பந்தமாக மூன்று பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். மேலும் இருவரை திங்கள்கிழமை கைது செய்தார்கள் .

“தூக்கத்திலேயே என் புருஷன தூக்குங்கடா” -கூலிப்படைக்கு உத்தரவு போட்ட பொண்டாட்டி.