“வீட்டுக்கு வராத மனைவி” : கை, கால்கள் செயலிழந்த மாமியாரை வெட்டி கொன்ற மருமகன்!

 

“வீட்டுக்கு வராத மனைவி” : கை, கால்கள் செயலிழந்த மாமியாரை வெட்டி கொன்ற மருமகன்!

மனைவியுடனான தகராறில் மாமியாரை மருமகன் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“வீட்டுக்கு வராத மனைவி” : கை, கால்கள் செயலிழந்த மாமியாரை வெட்டி கொன்ற மருமகன்!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை முள்ளாம்பட்டி காலனியை சேர்ந்த பொண்ணு பாப்பா (55). இவரது மகள் பூங்கொடி. திருமணம் ஆகி கணவர் கனகராஜுடன் அரவக்கறிச்சி அருகே உள்ள நம்பாகவுண்டனூரில் வசித்து வந்துள்ளார். பொண்ணு பாப்பா கை, கால் செயலிழந்த நிலையில் வீட்டில் பராமரிக்க ஆளின்றி இருந்து வந்துள்ளார். இதனால் அவருக்கு ஆதரவாக பூங்கொடி தாய் வீட்டுக்கு வந்து அவரை கவனித்து வந்துள்ளார்.

“வீட்டுக்கு வராத மனைவி” : கை, கால்கள் செயலிழந்த மாமியாரை வெட்டி கொன்ற மருமகன்!

இதை விரும்பாத பூங்கொடியின் கணவர் கனகராஜ் மனைவியை மீண்டும் வீட்டுக்கு வர சொல்லி வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் தாயை பார்த்துக்கொள்ள ஆள் இல்லை என்பதால் பூங்கொடி கணவருடன் செல்ல மறுத்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

“வீட்டுக்கு வராத மனைவி” : கை, கால்கள் செயலிழந்த மாமியாரை வெட்டி கொன்ற மருமகன்!

இந்நிலையில் சம்பவத்தன்று கனகராஜ் மீண்டும் தன் மனைவி பூங்கொடியை வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் வழக்கம் போல பூங்கொடி வர மறுத்ததால், ஆத்திரமடைந்த கனகராஜ் அரிவாளால் தனது மாமியார் பொண்ணு பாப்பாவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த பொண்ணு பாப்பா சம்பவ இடத்திலேயே பலியானார்.

“வீட்டுக்கு வராத மனைவி” : கை, கால்கள் செயலிழந்த மாமியாரை வெட்டி கொன்ற மருமகன்!

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொண்ணு பாப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் மருமகன் கனகராஜையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.