சாந்திமுகூர்த்தத்திற்கு அழைத்த கணவன் கொலை ! திருமணம் செய்தால் கணவருடன் படுக்க வேண்டுமா? மனைவி கேள்வி

 

சாந்திமுகூர்த்தத்திற்கு அழைத்த கணவன் கொலை ! திருமணம் செய்தால் கணவருடன் படுக்க வேண்டுமா? மனைவி கேள்வி

தன்னுடன் உடலுறவு கொள்ள விரும்பிய கணவனை கொலை செய்த ஒரு இளம்பெண் திருமணம் செய்து கொண்டால் உடலுறவு கொள்ள வேண்டும் என எனக்கு தெரியாது என கூறியது போலீசாரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

நைஜீரியாவின் இட்டாஸ்-கடாவில் வசிப்பவர் சல்மா ஹாசன், திருமணத்திற்கு 11 நாட்களுக்குப் பிறகு தனது கணவரை கொலை செய்ததற்காக கைது செய்யப்பட்டார்.
இந்த தம்பதிக்கு 11 நாட்களுக்கு முன்னர் திருமணம் ஆகி உள்ளது. முதலிரவன்று கணவர் பாலியல் தொடர்பாக அந்த பெண்ணை அணுகி உள்ளார். அவர் செய்வது தவறு என நினைத்த மணமகள் அதற்கு ஆட்சேபனை தெரிவித்தார். இருப்பினும், அவரது கணவர் கோபம் அகி அவளை அடித்து கட்டாயப்படுத்தி உள்ளார். இதனால் பயந்து போன அந்தப் பெண் கணவரை மிரட்ட கத்தியை எடுத்தபோது எதிரபாராத விதமாக அவரை குத்திவிட்டது. இதுகுறித்து அந்த பெண் தெரிவிக்கையில் “நாங்கள் திருமணம் செய்துகொண்டோம், நாங்கள் ஒருவரை ஒருவர் நேசித்தோம். ஆனால் உடலுறவு என்பது ஒரு யதார்த்தம் என்று எனக்கு தெரியாது. முதலிரவன்று அவர் என்னை பாலியல் ரீதியாக தொடர்புகொண்டபோது, நான் மறுத்துவிட்டேன். அவர் பின்னர் கோபமடைந்து, என்னை அடித்தார். பின்னர் அவரை பயமுறுத்துவதற்காக ஒரு கத்தியை எடுத்தேன், ஆனால் அவர் என்னை நெருங்கினார். அந்த பதட்டத்தில் அவரது மார்பில் கத்தியால் குத்திவிட்டேன். ஆனால் எனக்கு தெரிந்திருந்தால் நான் அவரை கொலை செய்திருக்க மாட்டேன் தெரிவித்தார்.