பொன்னமராவதி அருகே கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி பலி!

 

பொன்னமராவதி அருகே கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி பலி!

புதுக்கோட்டை

பொன்னமராவதி அருகே கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கருப்புகுடிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் அழகன் (85). இவரது மனைவி வள்ளி (82). இவர்களுக்கு ஒரு மகனும், 4 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமான நிலையில் தம்பதியினர், மகன் வீட்டில் வசித்து வந்தனர். வயது முதுமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அழகன் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வந்தார்.

பொன்னமராவதி அருகே கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி பலி!

இந்த நிலையில், அவர் கடந்த வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உறவினர்கள் நேற்று அவரது உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்ய ஏற்பாடு செய்து வந்தனர். கணவர் இறந்ததால் அதிர்ச்சியடைந்த வள்ளி, அவரது உடலின் அருகே அமர்ந்து, நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுது கொண்டிருந்தார். அப்போது, திடீரென கணவரின் மீது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

அடுத்தடுத்து கண்வன் – மனைவி இருவரும் உயிரிழந்ததால், உறவினர்கள் நேற்று இருவரது உடல்களுக்கும் ஒன்றாக இறுதிச்சடங்குகள் மேற்கொண்டனர். வயதான தம்பதியினர் இறப்பிலும் இணை பிரியாமல் இருந்தது, உறவினர்கள் மற்றும் கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.