கறி வெட்டும் கத்தியால்… கணவனை சரமாரியாக வெட்டிக் கொன்ற மனைவி!

 

கறி வெட்டும் கத்தியால்… கணவனை சரமாரியாக வெட்டிக் கொன்ற மனைவி!

காஞ்சிபுரத்தில் மதுபோதையில் அடிக்கடி தகராறு செய்து வந்த கணவனை மனைவி வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் நவ்ஷாத். இவரது மனைவி நஷிரியா. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ஆட்டோ ஓட்டுனரான நவ்ஷாத் குடிபோதைக்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்துள்ளார். அடிக்கடி அவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த நவ்ஷாத், கறி வெட்டும் கத்தியை எடுத்து நஷிரியாவை கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

கறி வெட்டும் கத்தியால்… கணவனை சரமாரியாக வெட்டிக் கொன்ற மனைவி!

ஆத்திரம் அடைந்த நஷிரியா அவரிடமிருந்து கத்தியை பிடுங்கி நவ்ஷாத்தை சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளார். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து துடிதுடித்த நவ்ஷாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து, வீட்டிலிருந்து சிவகாஞ்சி காவல் நிலையத்திற்கு நடந்தே சென்ற நஷிரியா தான் தனது கணவனை கொன்று விட்டதாக கூறி சரணடந்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நவ்ஷாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சரணடைந்த நஷிரியாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.