‘இறப்பிலும் இணைபிரியா தம்பதி’ கணவனை இழந்த அதிர்ச்சியில் மனைவி மரணம் – கலங்க வைக்கும் சம்பவம்!

 

‘இறப்பிலும் இணைபிரியா தம்பதி’ கணவனை இழந்த அதிர்ச்சியில் மனைவி மரணம் – கலங்க வைக்கும் சம்பவம்!

தஞ்சை அருகே இணைபிரியாத கணவன், மனைவி ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை கலங்கச் செய்துள்ளது.

தஞ்சையை அடுத்த பள்ளியக்ரஹாரம் பகுதியில் வசித்து வந்த தம்பதி செல்வம்(78) – மின்னல்கொடி(68). இவர்களுக்கு ரமேஷ் என்ற மகனும், ஜெயலட்சுமி, சித்ரா என்ற மகள்களும் இருந்தனர். மகள்கள் இருவரும் திருமணமாகி கணவர் வீட்டுக்கு சென்ற நிலையில், ரமேஷ் சில ஆண்டுகளுக்கு முன்னர் விபத்தில் உயிரிழந்துள்ளார். அதனால் இந்த முதிய தம்பதி தனியாக வசித்து வந்துள்ளனர்.

‘இறப்பிலும் இணைபிரியா தம்பதி’ கணவனை இழந்த அதிர்ச்சியில் மனைவி மரணம் – கலங்க வைக்கும் சம்பவம்!

லாரி கிளீனராக பணியாற்றி வந்த செல்வத்துக்கு வயது முதிர்வின் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் போகியுள்ளது. அதனால் அவரை மருத்துவமனையில் அனுமதித்து மின்னல்கொடி கவனித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், நேற்று காலை முதியவரை எழுப்ப மின்னல்கொடி எழுப்ப முயன்றுள்ளார். ஆனால் முதியவர் செல்வம் உறங்கிக் கொண்டிருந்த போதே உயிரிழந்திருக்கிறார். இதனையறிந்து அதிர்ச்சி அடைந்த மின்னல்கொடி அங்கேயே மயங்கி விழுந்து அவரும் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களை கலங்கச் செய்துள்ளது.