தென்காசி அருகே கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி பலி!

 

தென்காசி அருகே கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி பலி!

தென்காசி

தென்காசி அருகே கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா குலசேகரன்கோட்டையை சேர்ந்தவர் சண்முகவேல் (74). இவரது மனைவி ஜிஜி பாய் (72). இருவரும் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்கள் ஆவர். இவர்களுக்கு பாலமுருகன், சிவகுமார் மற்றும் சந்திரசேகர் ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.

தென்காசி அருகே கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி பலி!

இதனிடையே கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த சண்முகவேல், திருவேங்கடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தந்தை இறந்த செய்தியை தெரிவித்தால் தாயார் உடல்நிலை பாதிக்கப்படும் என கருதிய மகன்கள், இதனை அவரிடம் தெரிவிக்காமல் இருந்தனர்.

இந்த நிலையில், அதிகாலை வீட்டிற்கு உறவினர்கள் வந்து செல்வதை பார்த்த ஜிஜி பாய் இதுகுறித்து மகன் சந்திரசேகரிடம் விசாரித்தார். அவர் பதில் கூறாததால் நடந்தவற்றை யூகித்த ஜிஜி பாய், தன்னை விட்டுவிட்டு போய்விட்டாரா? என கூறிய படி மயங்கி விழுந்து உயிரிழந்தார். கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.