மனைவியை பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்த்துவிட்டு எஸ்கேப்!காணாமல் போன கணவனை கண்டுபிடிக்கக்கோரி மனைவி புகார்!

 

மனைவியை பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்த்துவிட்டு எஸ்கேப்!காணாமல் போன கணவனை கண்டுபிடிக்கக்கோரி மனைவி புகார்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுத்தூர்பேட்டை அருகே ஆத்தூர் கிராமத்தில் காணாமல் போன கணவனை கண்டுபிடிக்கக்கோரி புகார் அளித்தும் ஒரு வருடமாக திருநாவலூர் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

அத்தண்டமருதூர் கிராமத்தை சேர்ந்த மணிமேகலை என்ற பெண்ணிற்கும் உளுத்தூர்பேட்டை அருகேயுள்ள ஆத்தூர் கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் பாலமுருகன்-மணிமேகலைக்கு முதல் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் மீண்டும் பிரசவத்திற்காக விழுப்புரம் முண்டிப்பாக்கம் மருத்துவமனையில் மணிமேகலை அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மனைவியை பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்த்துவிட்டு எஸ்கேப்!காணாமல் போன கணவனை கண்டுபிடிக்கக்கோரி மனைவி புகார்!

இந்நிலையில் பாலமுருகன் முதல் குழந்தைக்கு உணவு வாங்கி வருவதாக கூறி விட்டு சென்ற பாலமுருகன் திரும்ப வரவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து திருநாவலூர் காவல் நிலையத்தில் பாலமுருகனின் மனைவி மணிமேகலை புகார் அளித்துள்ளார். புகார் அளித்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறும் மணிமேகலை, கணவனை மீட்டு தர வேண்டும் என்றும் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.