‘தூக்கில் தொங்கிய நிலையில்’ திருமணமான இளம்பெண் சடலமாக மீட்பு: போலீசார் தீவிர விசாரணை!

 

‘தூக்கில் தொங்கிய நிலையில்’ திருமணமான இளம்பெண் சடலமாக மீட்பு: போலீசார் தீவிர விசாரணை!

பல்லாவரம் அருகே திருமணமான இளம்பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதால் கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியில் வசித்து வந்த தம்பதி விக்னேஷ் (29) – திவ்யா (25). இவர்கள் 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்த நிலையில், இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை ஒன்று இருக்கிறது. திருமணம் ஆனதில் இருந்தே இருவருக்கும் அடிக்கடி சண்டை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

‘தூக்கில் தொங்கிய நிலையில்’ திருமணமான இளம்பெண் சடலமாக மீட்பு: போலீசார் தீவிர விசாரணை!

கால் டேக்சி டிரைவராக பணியாற்றி வரும் விக்னேஷ், நேற்று இரவும் திவ்யாவிடம் சண்டை போட்டுவிட்டு பணிக்கு சென்று விட்டதாக தெரிகிறது. வெகு நேரமாக குழந்தையின் அழுகுரல் கேட்டுக் கொண்டே இருந்ததால் அக்கம் பக்கத்தினர், திவ்யா வீட்டின் கதவை தட்டியுள்ளனர். ஆனால், உள்பக்கமாக கதவு பூட்டி இருந்ததால் சந்தேகமடைந்த அவர்கள் விக்னேஷுக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த விக்னேஷ், கதவை உடைத்து பார்த்த பொது தூக்கில் தொங்கிய நிலையில் திவ்யா சடலமாக இருந்துள்ளார். இதைக் கண்டு அனைவரும் அதிர்ந்து போயுள்ளனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார், திவ்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், விக்னேஷிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இருவருக்கும் திருமணம் ஆகி 5 வருடமே ஆகும் நிலையில் இந்த வழக்கு ஆ.டி.ஓ விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறது.