பானிபூரி வாங்கி வந்த கணவன்; ஆத்திரத்தில் மனைவி எடுத்த விபரீத முடிவு!

 

பானிபூரி வாங்கி வந்த கணவன்; ஆத்திரத்தில் மனைவி எடுத்த விபரீத முடிவு!

மகாராஷ்டிராவில் வீட்டில் சமைத்த உணவை சாப்பிடாமல் கணவன் பானிபூரி வாங்கி வந்ததால் ஆத்திரத்தில் மனைவி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் அம்பேகோன் பகுதியில் வசித்து வந்த தம்பதி ப்ரதிக்‌ஷா (23)- காஹினிநாத் (33) . இவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இருவீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை வேலையில் இருந்து வீடு திரும்பிய காஹினிநாத் வரும் போது பானிபூரி வாங்கி வந்துள்ளார்.

பானிபூரி வாங்கி வந்த கணவன்; ஆத்திரத்தில் மனைவி எடுத்த விபரீத முடிவு!

வீட்டில் தான் உணவு சமைத்தும் அதை சாப்பிடாமல் அவர் பானிபூரி வாங்கி வந்ததால் ஆத்திரமடைந்த ப்ரதிக்‌ஷா கணவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மறுநாள் காஹினிநாத் வேலைக்கு சென்றவுடன் ப்ரதிக்‌ஷா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். இதை அறிந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ப்ரதிக்‌ஷா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக ப்ரதிக்‌ஷாவின் கணவரை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.