ஆம்பூரில் குடும்ப தகராறில் மனைவி அடித்துக் கொலை – கணவர் கைது

 

ஆம்பூரில் குடும்ப தகராறில் மனைவி அடித்துக் கொலை – கணவர் கைது

திருப்பத்தூர்

ஆம்பூர் அருகே குடும்ப தகராறில் மனைவியை அடித்துக்கொன்ற கணவரை போலீசார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பெரியாங்குப்பம் பூவரசமர தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி பரமேஸ்வரி. இவர் ஆம்பூரில் உள்ள தனியார் ஷு தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இதனிடையே மதுப் பழக்கத்திற்கு அடிமையான பன்னீர்செல்வம் குடித்துவிட்டு வந்து அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

ஆம்பூரில் குடும்ப தகராறில் மனைவி அடித்துக் கொலை – கணவர் கைது

இந்த நிலையில், நேற்று மீண்டும் அவர் மதுஅருந்தி விட்டு வந்ததால் தம்பதியினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த பன்னீர்செல்வம், பரமேஸ்வரியின் தலையில் உருட்டுக்கடையால் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆலங்காயம் பகுதியில் பதுங்கியிருந்த பன்னீர்செல்வத்தை கைதுசெய்து, விசாரித்து வருகின்றனர்.