மாற்றுத்திறனாளி கணவரை எரித்துக்கொன்ற பெண் கைது!

 

மாற்றுத்திறனாளி கணவரை எரித்துக்கொன்ற பெண் கைது!

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே குடும்ப தகராறில் மாற்றுத்திறனாளி கணவரை தீவைத்து எரித்த பெண்ணை போலீசார் கைதுசெய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை அடுத்த முனுசுவலசை பகுதியை சேர்ந்தவர் முனியசாமி. மாற்றுத் திறனாளி. இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். மல்லிகா கட்டிட வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்தார்.

இந்த நிலையில், நேற்று முனியசாமி வீட்டில் உடல் கருகிய நிலையில் சடலமாக கிடந்தார். தகவல் அறிந்த கேணிக்கரை போலீசார், சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, மல்லிகாவின் மீது சந்தேகம் எழுந்ததால், போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

மாற்றுத்திறனாளி கணவரை எரித்துக்கொன்ற பெண் கைது!

விசாரணையில், மதுப்பழக்கத்திற்கு அடிமையான முனியசாமி மது அருந்தி விட்டு வந்து அடிக்கடி மனைவி மற்றும் குழந்தைகளை தாக்கி வந்தது தெரியவந்தது. சம்பவத்தன்று மீண்டும் தகராறு ஏற்பட்டபோது, முனியசாமி மல்லிகாவை கடுமையாக தாக்கி கொலை செய்ய முயன்றுள்ளார்.

இதனால் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியேறிய மல்லிகா, நள்ளிரவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த முனியசாமி மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்ததை ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து, மல்லிகாவை போலீசார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.