மனைவி, மகனின் தலையில் கல்லைப் போட்ட கணவன்… தூக்கத்திலேயே போன உயிர்கள்… நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம்

 

மனைவி, மகனின் தலையில் கல்லைப் போட்ட கணவன்… தூக்கத்திலேயே போன உயிர்கள்… நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம்

நடத்தையில் சந்தேகம் ஏற்பட்ட மனைவி, மகன் ஆகியோரின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துள்ளார் கணவன். இந்த கொடூர சம்பவம் திருச்சியில் நடந்துள்ளது.

திருச்சி மாவட்டம், அல்லித்துறையை சேர்ந்த மாரியப்பன்- ராதிகா தம்பதிக்கு கீர்த்திவாசன் (8), தீபக் (14) என்ற மகன்கள் உள்ளனர். கட்டிட தொழிலாளியான மாரியப்பன், மனைவியின் நடத்தையின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்றிரவு குடித்து விட்டு வந்த மாரியப்பன், மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதன் பின்னர் இவரும் தூங்க சென்றுவிட்டனர். மகன் கீர்த்திவாசன் வீட்டின் வெளியே பாய் விரிந்து படுத்து தூங்கிவிட்டார்.

தந்தை மாரியப்பன் வீட்டின் உள்ளே தூங்கிவிட்டார். இன்று அதிகாலையில் தாய் ராதிகா, மகன் கீர்த்திவாசன் ஆகியோர் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதனை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து சோமரசம்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர், இரண்டு உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விசாரணையில், மனைவி, மகனை கல்லைப் போட்டு தந்தை மாரியப்பன் கொலை செய்தது தெரியவந்தது. தப்பியோடிய மாரியப்பனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கட்டிய மனைவியையும், மகனையும் தலையில் கல்லைப்போட்டு தந்தையே கொலை செய்துள்ள சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.