“3 கொலை வழக்கு, 4 கொலை முயற்சி வழக்கு” : ரவுடி சங்கர் என்கவுன்ட்டர் குறித்து காவல் ஆணையர் விளக்கம்!

 

“3 கொலை வழக்கு, 4 கொலை முயற்சி வழக்கு” : ரவுடி சங்கர் என்கவுன்ட்டர் குறித்து காவல் ஆணையர் விளக்கம்!

சென்னை அயனாவரத்தில் போலீசை வெட்டிய ரவுடி சங்கர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான போலீசார் கஞ்சா வியாபாரி சங்கரை பிடிக்க முயன்றனர். காவலர் முபாரக்கை அரிவாளால் வெட்டியதில் ரவுடியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார் ஆய்வாளர் நடராஜன். சுட்டுக்கொல்லப்பட்ட சங்கரின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சங்கர் வெட்டியதால் படுகாயமடைந்த காவலர் முபாரக்கிற்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

“3 கொலை வழக்கு, 4 கொலை முயற்சி வழக்கு” : ரவுடி சங்கர் என்கவுன்ட்டர் குறித்து காவல் ஆணையர் விளக்கம்!

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், “நியூ ஆவடி சாலையில் ரவுடி ஷங்கர் போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். அவர் குண்டு காயத்துடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அயனாவரம் காவலர் முபாரக்கை அரிவாளால் வெட்டியுள்ளார் ரவுடி சங்கர். ஆனால் காவல் முபாரக் அவரை எச்சரித்துள்ளார்.

“3 கொலை வழக்கு, 4 கொலை முயற்சி வழக்கு” : ரவுடி சங்கர் என்கவுன்ட்டர் குறித்து காவல் ஆணையர் விளக்கம்!

இருப்பினும் அவர் தொடர்ந்து முபாரக்கை வெட்டியதால் என்கவுண்டர் செய்யப்பட்டார். ரவுடி சங்கர் மீது 3 கொலை வழக்கு, 4 கொலை முயற்சி வழக்கு உட்பட 50 வழக்குகள் உள்ளன. 5 முறை வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 9 முறை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கஞ்சா வழக்கில் பிடிபட்ட போது என்கவுண்டர் நடந்துள்ளது. மூன்று குண்டுகள் சங்கர் மீது பாய்ந்து உயிரிழந்துள்ளார். அடுத்த கட்டமாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் ரவுடிகள் சிலர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .தலைமறைவாக உள்ளவர்கள் கைது செய்யப்பட்டு விரைவில் சிறையில் அடைக்கப்படுவார்கள். என்கவுண்டர் குறித்து விசாரணை நடைபெற உள்ளதால் அது குறித்து மேலும் பேசுவது சரியாக இருக்காது” என்றார்.