பிரதமர் என் அமைதி காக்கிறார்? – ராகுல் காந்தி கேள்வி
லடாக்கில் இந்திய நிலைகள் மீது சீனா தாக்குதல் நடத்திய விவகாரத்தில் பிரதமர் மோடி ஏன் அமைதி காக்கிறார் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
லடாக் எல்லையில் சீன ராணுவம் தாக்கியதில் இந்திய ராணுவ வீரர்கள் 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. உண்மை நிலவரம் பற்றிய தகவல் எதுவும் இல்லை. நாட்டுக்காக உயிர் விட்ட தியாகத்தை இந்தியா மறக்காது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் கூறுகிறார், ஆனால் யார் யார் இறந்தார்கள் என்ற விவரத்தைக் கூட மறுக்கின்றனர்.
Why is the PM silent?
Why is he hiding?Enough is enough. We need to know what has happened.
How dare China kill our soldiers?
How dare they take our land?— Rahul Gandhi (@RahulGandhi) June 17, 2020
இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “பிரதமர் ஏன் அமைதியாக இருக்கிறார்? ஏன் அவர் ஒளிந்திருக்கிறார்? போதும் போதும்… என்ன நடந்தது என்று நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். என்ன துணிச்சல் சீனாவுக்கு இந்திய ராணுவ வீரர்களைக் கொல்ல? எவ்வளவு தைரியம் இருந்தால் எங்கள் நிலத்தை சீனா அபகரிப்பீர்கள்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதன் பிறகே அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.