நேர்மையா இருந்தது தப்பா! பீலா ராஜேஷ் மாற்றப்பட்டதற்கு பின்னால் இருக்கும் மர்மம்! 10 ஆம் தேதி நடந்தது என்ன?

 

நேர்மையா இருந்தது தப்பா! பீலா ராஜேஷ் மாற்றப்பட்டதற்கு பின்னால் இருக்கும் மர்மம்! 10 ஆம் தேதி நடந்தது என்ன?

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பணியிடமாற்றம் செய்யப்பட்டு புதிய சுகாதாரத்துறை செயலாளராக ஜெ.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். பீலா ராஜேஷ், வணிகவரித்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ஜெ.ராதாகிருஷ்ணன் மீண்டும் அப்பகுதிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்றும் தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. தற்போது வருவாய் நிர்வாக ஆணையராக உள்ள ராதாகிருஷ்ணன், அந்த பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்றும் அரசு தெரிவித்துள்ளது. சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ், மாற்றப்பட உள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் பரவிவந்தநிலையில் தற்போது அதிகாரபூர்வமாக அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நேர்மையா இருந்தது தப்பா! பீலா ராஜேஷ் மாற்றப்பட்டதற்கு பின்னால் இருக்கும் மர்மம்! 10 ஆம் தேதி நடந்தது என்ன?

பீலா ராஜேஷின் பதவி பறிப்போனதுக்கு அவர் கடந்த 10 ஆம் தேதி அளித்த பேட்டியும் ஒரு காரணம். அன்றைய தினம் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய பீலா ராஜேஷ், “கொரோனா இறப்பு எண்ணிக்கை குறித்து முறையான ஆய்வுகள் செய்ய சென்னையில் உள்ள பல்வேறு துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது” எனக்கூறினார்.

நேர்மையா இருந்தது தப்பா! பீலா ராஜேஷ் மாற்றப்பட்டதற்கு பின்னால் இருக்கும் மர்மம்! 10 ஆம் தேதி நடந்தது என்ன?

கொரோனா இறப்பு விகிதத்தை அரசு நேர்மையாக கையாளவில்லை என ஓபனாக அளித்த பேட்டியே இத்தனை பிரச்னைக்கும் காரணம். குறிப்பாக சென்னையில் கொரோனா இறப்பில் மாற்றம் இருப்பதாகவும், 400 இறப்புகள் மறைக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையறிந்த பீலா ராஜேஷ், சிறப்புக்குழு ஒன்றை அமைத்து இறப்பு எண்ணிக்கையை சரிப்பார்க்க உத்தரவிட்டார். மருத்துமனை தரப்பில் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தாகச் சொல்கிறார்கள். ஆக தப்பு நடந்திருப்பது, சென்னை மாநகராட்சியில் என்பதை கண்டறிந்தார் பீலா. இதனால் அவருக்கும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்க்கும் மோதல் ஏற்பட்டது.

நேர்மையா இருந்தது தப்பா! பீலா ராஜேஷ் மாற்றப்பட்டதற்கு பின்னால் இருக்கும் மர்மம்! 10 ஆம் தேதி நடந்தது என்ன?

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி ஆகியோருக்கு வேண்டப்பட்டவரான பிரகாஷ், பீலா ராஜேஷ் தன்னிடம் நடந்துக்கொள்ளும் விதத்தை கூறியுள்ளார். அதுமட்டுமின்றி பீலா ராஜேஷ் அமைத்த இறப்புக்குழு குறித்து முதலமைச்சருக்கு தகவல் அளிக்கவில்லையாம். இது முதலமைச்சருக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது. பிரகாஷ்க்கு, எம்.ஆர். விஜயபாஸ்கரும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் சப்போர்ட்! அனைத்து ஆண்களும் சேர்ந்து ஒரு பெண்ணை அந்த துறையிலிருந்தே எளிதாக நகர்த்திவிட்டனர்.