தமிழகத்தில் மட்டும் அதிக இளைஞர்கள் கொரோனாவிற்கு பலியாவது ஏன்?

 

தமிழகத்தில் மட்டும் அதிக இளைஞர்கள் கொரோனாவிற்கு பலியாவது ஏன்?

கொரோனா முதல் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலையில் இளைஞர்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக உயிரிழக்கின்றனர். தமிழகத்தில் தான் அதிக இளைஞர்கள் அடுத்தடுத்து கொரோனாவிற்குப் பலியாகியுள்ளனர். இது குறித்து மக்கள் வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கேரள மாநிலத்தை எடுத்துக் கொண்டால் அங்கே இருக்கும் இளைஞர்களும் பொதுமக்களும் போதிய முன்னெச்சரிக்கையுடன் இருக்கின்றனர்.

தமிழகத்தில் மட்டும் அதிக இளைஞர்கள் கொரோனாவிற்கு பலியாவது ஏன்?

அவர்கள் லேசான அறிகுறி தென்படும்போதே உடனடியாகப் பரிசோதனை மையத்துக்குச் சென்று சோதித்து விடுகின்றனர். நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாகவே மருத்துவமனைக்கு வந்து விடுகின்றனர். இதனால் பாதிப்பும் ஆக்சிஜன் தேவையும் குறைவாக உள்ளது. அந்த விழிப்புணர்வுதான் எல்லா இடங்களிலும் தேவைப்படுகிறது. கொரோனா நோய் அறிகுறி வரும்போதே மக்கள் வந்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

தமிழகத்தில் மட்டும் அதிக இளைஞர்கள் கொரோனாவிற்கு பலியாவது ஏன்?

பரிசோதனை முடிவுகள் வரும் முன்பே மருத்துவமனையில் சிகிச்சை தொடங்கப்பட வேண்டும். இதனால்தான் கேரள மாநிலத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் சதவீதம் குறைவாக உள்ளது. தமிழக இளைஞர்களைப் பொறுத்தவரை தொற்று அதிகமாவதற்குக் காரணம் தமக்கெல்லாம் கொரோனா ஏற்படாது என்று நினைத்துக் கொண்டு செயல்படுவதுதான். அறிகுறி தெரிந்ததும் பரிசோதனை செய்துகொள்ளாதது அவர்களின் பாதிப்பை அதிகப்படுத்துகிறது. எனினும் அறிவியல்பூர்வமான காரணத்தை ஐசிஎம்ஆர் தனியாக ஆய்வு செய்து தெரிவிக்கும்” என்றார்.