அக்டோபர் 1 முதல் 10,11,12 மாணவர்கள் பள்ளிகள் செல்ல அனுமதி ஏன்? அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம்

 

அக்டோபர் 1 முதல் 10,11,12 மாணவர்கள் பள்ளிகள் செல்ல அனுமதி ஏன்?   அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம்

கோபி சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட நாகதேவன்பாளையம், சிறுவலூர் ஊராட்சிகளில் ரூ.1 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் தொடக்க விழா மற்றும் சிறுவலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கன்று வளர்ப்பு கடனாக 46 விவசாயிகளுக்கு கடன் சிறுவணிக கடன், சுயஉதவிக்குழு கடன் என 54 பேருக்கு 44 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பிலான கடன் உதவிகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.

அக்டோபர் 1 முதல் 10,11,12 மாணவர்கள் பள்ளிகள் செல்ல அனுமதி ஏன்?   அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம்

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘’இந்திய பிரதமரின் பாராட்டை பெறும் அளவிற்கு தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அத்திக்கடவு&அவினாசி திட்டப்பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது’’என்றவரிடம், பள்ளிகள் திறப்பு குறித்த கேட்டபோது,

’’அக்டோபர் 1ந்தேதி முதல் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்லலாம் என்ற உத்தரவு என்பது, மாணவர்களுக்கு அவர்களின் பாடம் தொடர்பான சந்தேகங்களை நீக்கத்தான். அக்டோபர் 1ந்தேதி பள்ளி திறப்பு என்பதை பள்ளிக்கல்வித்துறை மட்டும் முடிவு செய்து அறிவித்து விட முடியாது. கொரோனோ தாக்கம் இருப்பதால், பள்ளிக்கல்வித்துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை ஆகியவை முதல் அமைச்சர் தலைமையில் ஆலோசனை நடத்திய பின்னர் அதற்கான முடிவை முதல் அமைச்சர் அறிவிப்பார்’’என்றார்.

அக்டோபர் 1 முதல் 10,11,12 மாணவர்கள் பள்ளிகள் செல்ல அனுமதி ஏன்?   அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம்

மேலும், ‘’பாடங்களை குறைப்பது குறித்த அறிக்கை முதல் அமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளது. அதில் இன்னும் பாடங்களை குறைக்கலாமா என்பது குறித்து முதல் அமைச்சர் ஆய்வு செய்வார். பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இந்த மாதம் இறுதி வரை நடைபெறும். மாணவர் சேர்க்கையை பொறுத்து நீட்டிக்கப்படும்’’என்றார்.