ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் பயன்படுத்த தற்காலிக தடை விதித்தது உலக சுகாதார அமைப்பு

 

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் பயன்படுத்த தற்காலிக தடை விதித்தது உலக சுகாதார அமைப்பு

ஜெனீவா: ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு தற்காலிக தடை விதித்துள்ளது.

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு தற்காலிக தடை விதித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா சிகிச்சையில் இந்த மாத்திரை பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த மாத்திரை முக்கியமாக மலேரியா நோய்க்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. கடந்த வாரம் தி லான்செட்டில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வு முடிவு வெளியீட்டிற்கு பிறகு இந்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் பயன்படுத்த தற்காலிக தடை விதித்தது உலக சுகாதார அமைப்பு

கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்தைப் பயன்படுத்துவதால் அவர்கள் இறக்கும் வாய்ப்பு அதிகரிப்பதாக உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். மேலும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளின் பாதுகாப்பு தரவுகளை ஆராய்ந்து கண்காணித்த பிறகே மீண்டும் பயன்படுத்துவது பற்றி முடிவு செய்யப்படும் என்று கூறினார்.