‘மனதை வென்ற சுரேஷ் தாத்தா’ பாராட்டும் கமல்ஹாசன்; எவிக்ட் ஆகப்போவது யார்?

 

‘மனதை வென்ற சுரேஷ் தாத்தா’ பாராட்டும் கமல்ஹாசன்; எவிக்ட் ஆகப்போவது யார்?

பிக் பாஸ் சீசன் 4 இன் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது.

சண்டை, கோபம், பாசம், அன்பு, விளையாட்டு என எல்லாவற்றும் ஒருசேர அமைந்திருக்கிறது பிக் பாஸ் சீசன்4. இரண்டே வாரத்தில் மக்களால் அதிகமாக பேசப்படும் பிக் பாஸ் ஹவுசில் இன்று முதல் எவிக்சன் நடக்கவிருக்கிறது. சம்யுக்தா,கேபி, ரம்யா பாண்டியன், ஆஜித், ஷிவானி, ரேகா, சனம் ஆகியோர் நாமினேட் ஆகியிருக்கின்றனர். பெரும்பாலும் ரேகா தான் எவிக்ட் செய்யப்படுவார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

‘மனதை வென்ற சுரேஷ் தாத்தா’ பாராட்டும் கமல்ஹாசன்; எவிக்ட் ஆகப்போவது யார்?

இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரோமோவில் ஹவுஸ் மேட்ஸ் பலர், ரியோவுக்கும் ஆரிக்கும் மாஸ்க் கொடுப்பது போல காட்டப்பட்டிருந்தது. அடுத்த புரோமோவில், எவிக்ட் ஆகப்போவது யார்? என கமல் அறிவிப்பது போல காட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள 3ஆவது புரோமோவில், கேபியிடம் நீங்க ரொம்ப ஃபீல் பண்றிங்க போல.. அது ஃபீல் பண்ண வேண்டிய விஷயம் இல்ல என கமல்ஹாசன் கூறுகிறார்.

‘மனதை வென்ற சுரேஷ் தாத்தா’ பாராட்டும் கமல்ஹாசன்; எவிக்ட் ஆகப்போவது யார்?

அதற்கு கேபி, நான் அவர்களிடமே சொல்லி விட்டேன். எனக்கு தாத்தாவ கஷ்டபடுத்தி அந்த டாஸ்க் செய்யணும்னு விருப்பமே இல்லை எனக்கூறுகிறார். பிறகு, உங்களுக்கு ஸ்தானத்தில் இருக்க விருப்பமா? தாத்தா ஸ்தானத்தில் இருக்க விருப்பமா? என கேட்க, தாத்தா தான் சார் என சுரேஷ் பதில் அளிப்பது போல புரோமோ முடிகிறது. ஒரே டாஸ்க்கில் மனதை வென்ற சுரேஷ் தாத்தா, ஆரிக்கும் ரியோவுக்கும் முகமூடி என பல திருப்பங்களுடன் இருக்கும் பிக் பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேற போகிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்.