ரஜினியின் ஆதரவு யாருக்கு? தமிழருவி மணியன் பேட்டி!

 

ரஜினியின் ஆதரவு யாருக்கு? தமிழருவி மணியன் பேட்டி!

ரஜினி அரசியலில் யாருக்கும் ‘ வாய்ஸ்’ கொடுக்க மாட்டார் என்று நினைக்கிறேன்என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி தொடங்குவதாக அறிவித்த நிலையில் அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றது. ஆனால் ரஜினிக்கு ஏற்பட்ட திடீர் உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், உடல்நிலையை கருத்தில் கொண்டு தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ரஜினியின் ஆதரவு யாருக்கு? தமிழருவி மணியன் பேட்டி!

இந்த சூழலில் நடிகர் ரஜினியை அரசியலுக்கு அழைக்கும் விதமாக நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ரஜினி ரசிகர்கள் அறவழி போராட்டம் செய்தனர். இதில் வா தலைவா; அரசியலுக்கு வாங்க ரஜினி என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் போராட்டம் நடத்தினர்.இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் அரசியலுக்கு வரமாட்டேன் ; நான் அரசியலுக்கு வராததை மறுபரிசீலனை செய்யக்கோரி, நிகழ்ச்சி நடத்தியது வேதனை தருகிறது என்று குறிப்பிட்டு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

ரஜினியின் ஆதரவு யாருக்கு? தமிழருவி மணியன் பேட்டி!

இந்நிலையில் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன், ரஜினிகாந்த் யாருக்கும் தேர்தலில் ஆதரவு அளிக்கமாட்டார். யாருக்கு எதிராகவும் ரஜினி குரல் கொடுக்க மாட்டார் என்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார். ரஜினி அரசியல் தொடங்குவதாக அறிவித்தவுடன் தமிழருவி மணியனுக்கு மேற்பார்வையாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து ரஜினி அரசியலுக்கு வர போவதில்லை என்று அறிவித்ததும் விரக்தியின் உச்சத்திற்கே சென்ற தமிழருவி மணியன், இறப்பு என்னை தழுவும் இறுதி நாள் வரை நான் அரசியலில் மீண்டும் அடியெடுத்து வைக்கமாட்டேன் என்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.