விஜயகாந்த் சொன்ன மந்திரம்; நம்பிக்கையின் உச்சத்தில் விஜய பிரபாகரன்

 

விஜயகாந்த் சொன்ன மந்திரம்; நம்பிக்கையின் உச்சத்தில் விஜய பிரபாகரன்

எங்கு போட்டியிட்டாலும் தேமுதிக தொண்டர்கள் என்னை வெற்றிபெற வைப்பார்கள் என்று விஜய பிரபாகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் சொன்ன மந்திரம்; நம்பிக்கையின் உச்சத்தில் விஜய பிரபாகரன்

தமிழகத்திற்கு ஏப். 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு மட்டும் 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் பாஜகவுடன் ஓரளவு உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் தேமுதிக எந்த நேரத்திலும் கழட்டிவிடப்படலாம் என்று தெரிகிறது. இதனால் தான் 234 தொகுதிகளில் தேமுதிக தனித்து நின்றாலும் வெற்றி நிச்சயம் என அக்கட்சியினர் அறைகூவல் விடுத்து வருகிறார்கள்.

விஜயகாந்த் சொன்ன மந்திரம்; நம்பிக்கையின் உச்சத்தில் விஜய பிரபாகரன்

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விஜய பிரபாகரன், ” தொண்டர்கள் விரும்புவதால் தேர்தலில் போட்டியிடுகிறேன். கேப்டன் சென்று வா வெற்றி நமதே என்றார். நான் எந்த தொகுதியில் நின்றாலும் என்னை மக்கள் ஜெயிக்க வைப்பார்கள். கூட்டணிப் பேச்சுவார்த்தை குறித்த இறுதி முடிவை கட்சி மூத்த நிர்வாகிகள் தான் எடுப்பார்கள். நான் வேட்புமனு தாக்கல் மட்டுமே செய்துள்ளேன். தேமுதிக சார்பாகப் போட்டியிட விருப்ப மனு அளித்த வேட்பாளர்களுக்கு நாளை முதல் 8-ம் தேதி வரை நேர்காணல் நடைபெறவுள்ளது. கட்சியின் தலைவர் விஜயகாந்த் நேர்காணல் நடத்துவார்” என்றார்.