பிஎம் கேர்ஸ் நிதி எங்கே போனது? யாருக்காவது தெரியுமா? மம்தா பானர்ஜி

 

பிஎம் கேர்ஸ் நிதி எங்கே போனது? யாருக்காவது தெரியுமா? மம்தா பானர்ஜி

கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்க நிதி உதவி அளிக்குமாறு பிரதமர் கோரிக்கை விடுத்ததின் பேரில், பி.எம்.கேர்ஸ் எனப்படும் பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், நடிகர்கள் என பலரும் நிதிஉதவி அளித்தனர். பிரதமர் நிவாரண நிதி PMNRF இருக்கும்போது இப்போ புதுசா எதுக்கு PM CARES? என பலரும் கேள்வி எழுப்பினர்.

பிஎம் கேர்ஸ் நிதி எங்கே போனது? யாருக்காவது தெரியுமா? மம்தா பானர்ஜி

இதனால் வழக்கறிஞர் அபய் குப்தா என்பவர் பிஎம் கேர் நிதி குறித்த விவரங்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கோரியிருந்தார். பிஎம் கேர் நிதிக்கு எவ்வளவு தொகை வந்துள்ளது? அதில் எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட விவரங்களை கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த பிரதமர் அலுவலகம் பி.எம்.கேர் நிதி அமைப்பு அல்ல என்றும், எனவே அதுகுறித்த தகவல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வழங்க முடியாது என பதிலளித்தது. அதன்பின் பிஎம் கேர் நிதி குறித்து யாரும் வாய் திறக்கவில்லை.

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, “என்னுடைய அரசு பாஜக அரசின் விருப்பத்துக்கு ஏற்ற மாதிரி செயல்படாது. பாஜக அரசியல் கட்சியே கிடையாது. பி.எம் கேரின் கீழ் வசூல் செய்யப்பட்ட நிதி எங்கே போனது? யாருக்காவது தெரியுமா? அந்த லட்சக்கணக்கான ரூபாய் நிதி எங்கே சென்றது? எதற்காக எந்த தணிக்கையும் செய்யப்படவில்லை? கொரோனா தொற்றுக்கு எதிராக போராடுவதற்கு மத்திய அரசு நமக்கு என்ன கொடுத்தார்கள்? ” என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார்.