ஐபிஎல் மேட்ச் அட்டவணையை எப்பதான் வெளியிடுவாங்களாம்? #IPL_Update

 

ஐபிஎல் மேட்ச் அட்டவணையை  எப்பதான் வெளியிடுவாங்களாம்? #IPL_Update

ஐபிஎல் பீவர் கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்களைத் தொற்றிவருகிறது.

ஐபிஎல் போட்டிகளின் வருகை கிரிக்கெட்டின் முகத்தையே மாற்றி அமைத்துவிட்டது. அது ஒரு விளையாட்டுப் போட்டி என்பதைத் தாண்டி மாபெரும் கேளிக்கை கொண்டாட்டாமாக மாறிவிட்டது.

மூன்று மணி நேர விறுவிறுப்பான சினிமாவைப் பார்க்கும் மனநிலைக்கு ஐபிஎல் போட்டி பார்வையாளர்களை மாற்றிவிட்டது என்றும் சொல்லலாம்.

ஐபிஎல் மேட்ச் அட்டவணையை  எப்பதான் வெளியிடுவாங்களாம்? #IPL_Update

கொரோனா தாக்கத்தினால் மார்ச்சில் தொடங்க வேண்டிய ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி ரத்து செய்யப்படலாம் என்ற பேச்சு எழுந்தது. ஆனால், செப்டம்பர் 19-ம் தேதியில் ஐக்கிய அமீரகத்தில் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

தோனி, ரெய்னாவின் ஓய்வு அறிவிப்பு வந்ததும், அவர்களின் ஆட்டத்தைக் காணும் ஆவல் ரசிகர்களுக்கு ஏற்பட்டது. அதற்கு சரியான தீனியை ஐபிஎல் போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் மேட்ச் அட்டவணையை  எப்பதான் வெளியிடுவாங்களாம்? #IPL_Update

சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட அனைத்து டீம்களின் வீரர்களும் ஐக்கிய அமீரத்திற்குச் சென்றுவிட்டனர். அடுத்தது என்ன… முதல் போட்டியில் யார் யாரோடு மோதப்போகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

ஐபிஎல் போட்டித் தொடங்க, இன்னும் ஒரு மாதம்கூட முழுசாக இல்லை. இந்த நிலையில் இன்னும் ஐபிஎல் மேட்ச் அட்டவணை வெளியிடப்பட வில்லை. இதனால், ரசிகர்கள் ஒருபக்கம் ஏமாற்றம் அடைந்தாலும், ஒவ்வோர் அணியும் தங்கள் ஆட்ட வியூகத்தைத் திட்டமிட முடியாமல் திணறிவருகிறார்கள்.

ஐபிஎல் மேட்ச் அட்டவணையை  எப்பதான் வெளியிடுவாங்களாம்? #IPL_Update

செப்டம்பர் 19-ம் தேதியாவது அட்டவணையை வெளியிடுவார்களா… இல்லை இன்னும் தள்ளி வைப்பார்களா… என்று ரசிகர்கள் கமெண்ட் பண்ண ஆரம்பித்துவிட்டார்கள்.

ஐபிஎல் மேட்ச் ஷெட்யூலை வெளியிட தாமதம் ஏன் என்ற தகவல் வெளியாகியுள்ளது.  வெளிநாட்டு வீரர்கள் பலரின் வருகையில் சில உத்திரவாதங்கள் இல்லை என்பது ஒரு காரணம். தற்போது ஆடும் வீரர்களின் கொரோனா பரிசோதனை முடிவுகளைப் பார்த்தும் ஷெட்யூல் அமைக்க வேண்டுமாம். இந்த இரண்டு காரணங்களால் அட்டவணை தாமதமாகிறதாம்.