சினிமா தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும்? அமைச்சர் கடம்பூர் ராஜு பதில்

 

சினிமா தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும்? அமைச்சர் கடம்பூர் ராஜு பதில்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக பள்ளி கல்லூரிகள்,மால்கள், தியேட்டர்கள், கோவில்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன. கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு மேலாக இவை அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றன. இதனிடையே ஊரடங்கில் தளர்வுகள் அளிக்க பட்ட போது, சிறிய கோவில்களை மட்டுமே திறக்க அரசு அனுமதி அளித்தது. அதே போல சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இன்னும் தியேட்டர்கள், மால்கள் உள்ளிட்ட எதற்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. தமிழகத்தில் கொரோனா குறைந்து வருவதாக கூறப்படும் நிலையில், தியேட்டர்கள் எப்போது மீண்டும் திறக்கப்படும் என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது.

சினிமா தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும்? அமைச்சர் கடம்பூர் ராஜு பதில்

இது குறித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, தியேட்டர்களை எப்போது திறக்கலாம் என மத்திய அரசு செப்டம்பர் 1 ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளதாகவும் அந்த ஆலோசனையில் மத்திய அரசு என்ன வழிகாட்டுதல்களை சொல்கிறதோ, அதன்படியே தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அதனால் வரும் 1 ஆம் தேதி தியேட்டர்களை திறப்பது பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.