பள்ளிகள் திறப்பு எப்போது? – அமைச்சர் செங்கோட்டையன் பதில்

 

பள்ளிகள் திறப்பு எப்போது? – அமைச்சர் செங்கோட்டையன் பதில்

செப்டம்பர் 21ஆம் தேதி முதல் ஐந்து நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

பள்ளிகள் திறப்பு எப்போது? – அமைச்சர் செங்கோட்டையன் பதில்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகதேவன்பாளையம். நாதிபாளையம், வெள்ளாங்கோயில், மொடச்சூர் ஆகிய பகுதிகளில் மேல்நிலை தொட்டி அமைத்தல், கான்கிரீட் சாலைகள் அமைத்தல், கூட்டுறவு வங்கி கட்டிடம் மற்றும் கறவை மாடு கடன் வழங்குதல் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளை ரூ.1 கோடியே 19 லட்சத்தில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார்.

பள்ளிகள் திறப்பு எப்போது? – அமைச்சர் செங்கோட்டையன் பதில்

பின்னர் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது, ‘’ மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்வித் திட்டத்திற்கு ஆய்வு செய்ய குழு அமைக்கப் பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிடப் பட்டுள்ளது. இது காலாண்டு, அரையாண்டு தேர்வு விடுமுறை போன்றது. இதன் மூலமாக மாணவர்கள் மன அழுத்தம் இன்றி மகிழ்ச்சியாக இருப்பதற்கு இது அமையும். இதனை கண்காணிப்பதற்கு வட்ட அளவில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளிகள் திறப்பு என்பது கொரோனா பாதிப்பு குறைந்த பின்னா் தான் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும். பகுதி நேர நூலகங்கள் முழுநேர நூலகங்களாக மாற்றம் செய்ய துறை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என தொவித்துள்ளாா்.