அமித்ஷாவிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வைத்த கோரிக்கை என்ன?
Nov 21, 2020, 21:57 IST1605976058000
இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக சென்னை வந்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் முதலமைச்சர் பழனிசாமி ஒரு சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். தமிழக நலன் கருதி அமித்ஷாவிடம் முதல்வர் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளார்.
- நதிகள் இணைப்புத்திட்டத்திற்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும்
- கோதாவரி- காவிரி இணைப்பு, காவிரி- குண்டாறு இணைப்பு திட்டங்களுக்கு ஒப்ப்தல் தர கோரிக்கை
- நடந்தாய் வாழி காவிரி திட்டத்திற்கான நிதியை விரைந்து விடுவிக்க வேண்டும்
- தருமபுரி, விருதுநகரில் மெகா டெக்ஸ்டைல் தொழிற்பூங்கா அமைக்க வேண்டும்
- டெக்ஸ்டைல் பூங்கா அமைப்பதற்கான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை மத்திய அரசு வழங்க வேண்டும்
- சென்னை அருகே மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு பூங்கா அமைக்க நிதி, தொழில்நுட்ப வசதிகளை மத்திய அரசு வழங்க வேண்டும்
- மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தை மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்த வேண்டும்
- மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு 50% நிதி பங்களிப்பை வழங்க வேண்டும்