திருச்சியில் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு: வழக்கு ஆகஸ்ட் 27க்கு ஒத்திவைப்பு!

 

திருச்சியில் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு:  வழக்கு ஆகஸ்ட் 27க்கு ஒத்திவைப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா வேகம் அதிகரித்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில் வழக்கறிஞர் ஒருவர் திருச்சியில் கொரோனா வேகம் அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.

திருச்சியில் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு:  வழக்கு ஆகஸ்ட் 27க்கு ஒத்திவைப்பு!

அதில் திருச்சியில் அதிக பகுதிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சமூக பரவலை தடுக்க உடனடியாக இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். இந்திய மருத்துவக் கழகத்தின் திருச்சி கிளை பரிந்துரைப்படி திருச்சி மாவட்டத்தில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் அவர் மனுவில் கேட்டுக் கொண்டார்.

திருச்சியில் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு:  வழக்கு ஆகஸ்ட் 27க்கு ஒத்திவைப்பு!

இந்நிலையில் இந்த மனுவின் மீதான விசாரணை இன்று நீதிபதி சத்தியநாராயணன் ராஜமாணிக்கம் ஆவது அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், “திருச்சியில் கொரோனா நோயை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பிய நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் காணொலி மூலம் ஆஜராகி விளக்கம் தர உத்தரவிட்டனர். மேலும் திருச்சியில் கட்டுப்படுத்த இரண்டு வாரம் முழுக்க கோரிய இந்த வழக்கு ஆகஸ்ட் 27 க்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் நீதிபதிகள் கூறினர்.