மருத்துவ படிப்பில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5% இடஒதுக்கீடு – தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?

 

மருத்துவ படிப்பில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5% இடஒதுக்கீடு – தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்களில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி மாநில அரசு சட்டம் இயற்றியது. இந்தச் சட்டத்தை எதிர்த்து தனியார் பள்ளி மாணவர்கள் சிலரும், அரசுப் பள்ளி மாணவர்களைப் போல, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரி தமிழ்நாடு கத்தோலிக்க கல்விச் சங்கமும் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வின் முன்பு நிலுவையில் உள்ளது.

மருத்துவ படிப்பில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5% இடஒதுக்கீடு – தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?

இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்திருந்த மக்கள்நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன்,”அரசுப் பள்ளி மாணவர்களும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களும் மருத்துவ படிப்பில் சேர ஏதுவாக அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு 10 சதவீதத்திற்கும் குறையாமல் இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்தது.

மருத்துவ படிப்பில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5% இடஒதுக்கீடு – தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?

அதன் அடிப்படையிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டு சட்டம் இயற்றப்பட்டது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டு அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

மருத்துவ படிப்பில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5% இடஒதுக்கீடு – தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?

அப்போது, அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் இந்த வழக்கில் விரிவாக வாதிட கால அவகாசம் வேண்டும் என்பது மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் கேட்க்கொண்டனர். இதையடுத்து வழக்கு விசாரணையை ஆறு வாரத்துக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.