திமுக செய்த சமூக நீதி என்ன? : முதல்வருக்கு சீமான் கேள்வி!

 

திமுக செய்த சமூக நீதி என்ன? : முதல்வருக்கு சீமான் கேள்வி!

சமூகநீதிப் போராளி இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 76ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்றுகாலை, நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இரட்டைமலை சீனிவாசன் நினைவைப் போற்றும் நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.

திமுக செய்த சமூக நீதி என்ன? : முதல்வருக்கு சீமான் கேள்வி!

இந்நிலையில் நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட அனைத்தும் தனியார் மயம். யாரும் இது என் நாடு என்று சொல்லமுடியாது. இது அம்பானி நாடு அதானி நாடு. திருக்குறளில் திருவள்ளுவர் கற்பிக்காத வாழ்வியலை திராவிடம் கற்பித்து விட்டதா? சமூகநீதி நாள் – சமூகநீதி என்பது வெற்று வார்த்தைகளில் பேசுவது அல்ல. திமுக இந்த மண்ணின் மக்களுக்கு வழங்கி இருக்கும் சமூகநீதி என்ன?சமூக நீதிக்காக பெரியார் மட்டுமே போராடினார் என்பதை நான் ஏற்கவில்லை” என்றார்.

திமுக செய்த சமூக நீதி என்ன? : முதல்வருக்கு சீமான் கேள்வி!

தொடர்ந்து பேசிய அவர், “கருணாநிதி ஆட்சியின் நோக்கியா ஆலை மூடப்பட்டது. தற்போது ஃ போர்டு ஆலை மூடப்படுகிறது. நீட் தேர்விற்கு எதிரான தமிழக அரசின் தீர்மானம் எதற்கும் உதவாது. என்னிடம் ஆட்சியை கொடுத்தால் ஒரே இரவில் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் அகற்றி விடுவேன் என்று கூறினார்.