அர்ச்சனா இன்றைக்கு வெளியேற்றப்பட்டால் என்னவாகும்? பிக்பாஸ்4

 

அர்ச்சனா இன்றைக்கு வெளியேற்றப்பட்டால் என்னவாகும்? பிக்பாஸ்4

பல பஞ்சாயத்துகள் பேசப்படும் சனிக்கிழமை நாள். நாட்டாமை கமல்ஹாசனின் வருகையும் விசாரணையும் கடுமையாக இருக்கும். மேலும், ஒவ்வொருவரும் தனக்கான மனக்குறைகளைக் கொட்டித் தீர்க்கும் நாள். குறிப்பாக எவிக்‌ஷனிலிருந்து ஓரிருவர் விடுபடும் நாள். என்னவாயிற்று நேற்று? கட்டுரையில் பார்க்கலாம்.

வெள்ளிக்கிழமை

வழக்கம்போல வேக்கப் சாங் ஒலிக்க, ஆட்டம் பாட்டம் எனக் கொண்டாடினர். எவிக்‌ஷன் குறித்த பயம் எவரிடம் இருப்பதாகத் தெரியவில்லை. சின்னச் சின்னச் சண்டைகள் இருந்தன.

அர்ச்சனா இன்றைக்கு வெளியேற்றப்பட்டால் என்னவாகும்? பிக்பாஸ்4

ஆரி மற்றும் ரியோவிடம் பாலா மன்னிப்பு கேட்டது அனிதாவுக்குள் ஏதோ பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது அல்லது புது ஸ்டேட்டர்ஜியைத் தந்திருக்கிறது. ஏனெனில், ரியோவுக்கு நிறைய ரசிகர்கள் வெளியே இருப்பதாகவும், அவருடன் சண்டை போட்டால் ரியோ ரசிகர்களுக்குப் பிடிக்காது என்ற எண்ணம் அனிதாவுக்கு உண்டு. அதனால், ‘எவ்வளவு சண்டை போட்டவங்களே ஒண்ணு சேர்ந்துடுறாங்க… அண்ணன் – தங்கச்சியா இருந்தவங்க நாங்க’ என்று அணத்திக்கொண்டிருந்தார். அநேகமாக இம்முறை எவிக்‌ஷனிலிருந்து தப்பி, அடுத்த வாரமும் அவர் நாமினேஷனில் இருந்தால் மன்னிப்பு கேட்கும் படலம் நடக்கலாம்.

சனிக்கிழமை

கமல் வித்தியாசமான நிறக்கலவையிலான டிரெஸ்ஸோடு வந்திருந்தார். ‘முழுக்க கைத்தறியால் செய்தது’ என்று விளக்கம் கொடுத்ததும் கைத்தட்டல் கிடைத்தது.

கோழிப்பண்ணை டாஸ்க் பற்றி நீண்ட உரையாடல் நடந்தது. ஆரியின் தந்திரத்தைப் பலரும் கண்டுகொண்ட நாளாக பிக்பாஸ் வீட்டுக்குள் புரிந்துகொள்ளப்பட்டது. என்றைக்கும் இல்லாத திருநளாக ரம்யா அதிகம் கொந்தளித்தார். அதை கமல் லேசாக அதட்டி அமர்த்தினார்.

அர்ச்சனா இன்றைக்கு வெளியேற்றப்பட்டால் என்னவாகும்? பிக்பாஸ்4

ஆரியின் பிரச்சனையே எல்லோரின் தப்புகளைப் பட்டியலிடும்போது தன் தவறுகள் தெரியாது என்பதே. ஆனால், இந்த உத்தி நீண்ட நாட்களுக்கு உதவாது என்பதை அவர் புரிந்துகொண்டிருக்க வேண்டும். தவறி விட்டார்.

ஆரி கோழியாக இருந்தபோது பலர் வந்து தொட்டது தவறு என்றால், அதை அவரே செய்ததும் தவறு. இதைத்தான் பலரும் சொல்ல நினைத்தார்கள். அதையும் தவிர்த்து ஓட நினைத்தார் ஆரி. கமல் முன் அது எடுபட வில்லை.

ஆட்ட விதிகளை எப்போதும் நினைவுப்படுத்திக்கொண்டே இருந்த ரியோவுக்குப் பாராட்டுகளைச் சொன்னார் கமல். ஆனாலும் அது இந்த டாஸ்க்கில்தான் என்று நினைவூட்டினார்.

இதை இன்னும் சூடேற்ற, ‘இந்த வீட்டில் யார் நரி, யார் கோழி?’எனக் கேட்க, ஓரிருவரைத் தவிர அனைவரும் அர்ச்சனாவை கோழி என்க, ஆரிக்கும் பாலாவுக்கும் நரி ஓட்டுகள் சரிசமாக விழுந்தன.

அர்ச்சனா இன்றைக்கு வெளியேற்றப்பட்டால் என்னவாகும்? பிக்பாஸ்4

தன்னை நரி என அனிதா சொன்னதும் ஆரி ஜெர்க்கானார். ஏனெனில், அந்த வீட்டில் ஆரியுடன் மட்டும்தான் இப்போது அவர் நன்றாகப் பேசி வருகிறார். அப்படிப்பட்ட என்னையே கார்னர் செய்யறீங்களே என்பதுபோல இருந்தது. அதனால், ஆரியின் முறை வரும்போது பதில் மரியாதையாய் அனிதாவை நரி என்று முத்திரை குத்தினார். ஆனால், இதை அனிதா எதிர்பார்க்க வில்லை. ரியோ என்றால், விலகி விடுவார். ஆரி அப்படியல்லவே!

அனிதாவை சுவாரஸ்யம் இல்லாத போட்டியாளர் என்பதற்கு பாலா சொன்ன காரணம் சரியானது அல்ல என்று ஆரி வாதம் செய்தார். அதற்கு லேசாக ஆதரவு கொடுத்தார் ரம்யா.

ஷிவானிக்கு ஆதரவாக பாலா விளையாடுவதாக பழைய குற்றச்சாட்டு பொதுவெளிக்கு வருது இப்போதுதான். ஷிவானி யாரை நாமினேட் பண்றாரோ… அவரையே பாலா செய்வது… பாலா யாரை பெஸ்ட் எனத் தேர்ந்தெடுக்கிறாரோ அவரையே ஷிவானி தேர்ந்தெடுப்பதும் அப்படியான ஓர் எண்ணத்தை எல்லோருக்கும் (ஆடியன்ஸையும் சேர்த்து) தருவது இயல்பானதே. இருவரும் வழக்கம்போல மறுத்தார்கள்.

அர்ச்சனா இன்றைக்கு வெளியேற்றப்பட்டால் என்னவாகும்? பிக்பாஸ்4

ஒரு வழியாக எவிக்‌ஷனிலிருந்து காப்பாற்றும் பகுதிக்கு வந்தார் கமல். பலரும் எதிர்பார்த்ததுபோல ரியோ மற்றும் ஆரி காப்பாற்றப்பட்டார்கள். இன்றைய எவிக்‌ஷனில் அர்ச்சனா பெயர் அடிபடுகிறது. ஒருவேளை அவர் வெளியேற்றப்பட்டால் நிச்சயம் விளையாட்டின் சுவாரஸ்யம் குறைந்துவிடும்.

ஏனெனில், குருப்பிஸம் தாண்டி அர்ச்சனாவின் பங்களிப்பு சரியாகவே இருக்கிறது. டாஸ்க் எல்லாம் ரிஸ்க் எடுத்து விளையாடுகிறார். டாஸ்க்கின்போது அன்பு குறுக்கிடுவதை முடிந்தளவு தடுக்கிறார். ஆனால், இதில் எல்லாம் ஈடுபடாத கேபி, ஆஜித் எல்லாம் வீட்டுக்குள் இருந்துகொண்டு அர்ச்சனா வெளியேற்றப்பட்டால் ஆடியன்ஸ்க்குமே நம்பகத்தன்மை குறைந்துவிடும். என்ன செய்யபோகிறார்கள் எனப் பார்ப்போம்.