அவர்களை உற்சாகப்படுத்துவதற்காக நான் பேசியது மற்றவர்களை புண்படுத்திவிட்டது ..உண்மையை ஒப்புக்கொண்ட அமைச்சர் நாசர்

 

அவர்களை உற்சாகப்படுத்துவதற்காக நான் பேசியது மற்றவர்களை புண்படுத்திவிட்டது ..உண்மையை ஒப்புக்கொண்ட அமைச்சர் நாசர்

தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர், திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகரில் உள்ள அற்புத ஜெபகோபுரம் தேவாலயத்தின் 40ஆம் ஆண்டு துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியபோது, கிறிஸ்தவர்களின் வலிமையான ஜெபத்தால் தான் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்திருக்கிறது என்று பேசியிருந்தார்.

அவர்களை உற்சாகப்படுத்துவதற்காக நான் பேசியது மற்றவர்களை புண்படுத்திவிட்டது ..உண்மையை ஒப்புக்கொண்ட அமைச்சர் நாசர்

அமைச்சரின் இந்த பேச்சு திமுகவினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது. மற்ற மதத்தினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் ஏன் அப்படி பேசினேன் என்று அமைச்சர் விளக்கம் அளித்திருக்கிறார்.

’’எந்த நிகழ்ச்சிக்கு செல்கிறோமோ அந்த இடத்தில் கூடியிருக்கும் சம்பந்தப்பட்ட மக்களை சந்தோஷப்படுத்தும் படி பேசுவதுதான் ஒரு பேச்சாளரின் இலக்காக இருக்கும். அந்த அடிப்படையில்தான் நானும் அப்படி பேசிவிட்டேன். அது கிறிஸ்தவர்களின் நிகழ்ச்சி என்பதால் கூடியிருந்தவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள் என்பதால் அவர்களை சந்தோசப் படுத்துவதற்காக சில விஷயங்களை பேசினேன்.

அவர்களை உற்சாகப்படுத்துவதற்காக நான் பேசியது மற்றவர்களை புண்படுத்திவிட்டது ..உண்மையை ஒப்புக்கொண்ட அமைச்சர் நாசர்

இந்தியாவில் பல்வேறு மொழிகள் மதங்கள் சார்ந்து இருந்தாலும் ஒவ்வொரு மதத்தவரும் தங்களுக்குள் வேற்றுமை இல்லாமல் தான் பழகி வருகின்றனர். மத ரீதியில் பிளவு படுத்த முடியாது என்று சொன்னேன்.

பின்னர், கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்துவதற்காக கிறிஸ்தவர்களின் வலிமையான ஜெபத்தால் தான் தமிழகத்தில் இன்றைக்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. கிறிஸ்தவர்களின் வலிமையான ஜெபத்தால்தான் திமுக ஆட்சிக்கு வந்திருக்கிறது. அந்த அளவுக்கு கிறிஸ்தவ மக்களின் ஜெபம் வலிமையானது என்று பேசினேன்.

கிறிஸ்தவர்களின் உற்சாகத்திற்கு நான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது; மற்றவர்களை புண்படுத்திவிட்டது. ஆனால் நான் திட்டமிட்டு சர்ச்சையை ஏற்படுத்த வேண்டும் என்று பேசவில்லை’’ என்று சொல்லியிருக்கிறார்.