எடுப்பான மார்பகத்துக்கு என்ன செய்யலாம்?

 

எடுப்பான மார்பகத்துக்கு என்ன செய்யலாம்?

மார்பகம்… பெண்களுக்கு எடுப்பான முன்னழகைத்தருவது மார்பகங்கள். பெண்களின் அடையாளமான இந்த மார்பகங்கள், தாய்மைப்பேறு அடைந்தநிலையில் தம் குழந்தைக்கு பாலூட்ட இறைவனால் படைக்கப்பட்ட ஓர் உறுப்பு.

எடுப்பான மார்பகத்துக்கு என்ன செய்யலாம்?

கச்சு – பிரா:
`கச்சிருக்கும்போது கரும்பானேன் – கைக்குழந்தை வெச்சிருக்கும்போது வேம்பானேன்’ என்றொரு பழம்பாடல் உண்டு. பெண்கள் அணியும் பிராவை அந்தக்காலத்தில் கச்சு அல்லது கச்சை என்பார்கள். இளமைக்காலத்தில் கச்சு என்னும் பிராவை அணியும் பெண்களின் முன்னழகு அழகாக இருக்கும். ஆனால், திருமணமாகி குழந்தை பெற்ற பெண்கள் பாலூட்டும்போது கச்சு அணியமாட்டார்கள்.

பால் சுரப்பதாலும் குழந்தைகள் பால் அருந்துவதாலும் பருத்துக் காணப்படுவதுடன் தொய்வடைந்த நிலையில் காணப்படும். இதனால் கச்சு அணியமாட்டார்கள். ஆக கச்சு அணியாத பெண்களை கணவர்களுக்குப் பிடிக்காது என்பதையே இந்தப்பாடல் சுட்டிக் காட்டுகிறது. இளமைக்காலத்தில் கவர்ச்சியாகத் தெரிந்தவர்கள் தாய்மைப்பேறுக்குப் பிறகு வேப்பங்காயைப் போன்று கசப்பாகத் தெரியுமாம்.

எடுப்பான மார்பகத்துக்கு என்ன செய்யலாம்?தாய்மை:
தாய்மைப்பேறு காலங்களில் மட்டுமல்ல மாதவிடாய்க் காலங்களிலும்கூட ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றங்களால் மார்பகங்களின் அளவு கூடவோ, குறையவோ செய்யும். இந்தக் குறைபாட்டினை சரிசெய்ய ஏராளமான வழிகள் உள்ளன.

மாதுளம்பழத்தின் தோலை நன்றாகக் காயவைத்து தூளாக்க வேண்டும். அதனுடன் கடுகுஎண்ணெய் சேர்த்து மேல் பூச்சாகப் பூசி வந்தால் சுருங்கிய மார்பகங்கள் காலப்போக்கில் பருக்கத்தொடங்கும். இதேபோல் மார்பகத்தின்மீது விளக்கெண்ணெய் தடவி அதன்மீது மாதுளைவிதைகளைப் பொடியாக்கி தூவி பஞ்சு வைத்துக் கட்டினாலும் மார்பகம் வளரும்.

எடுப்பான மார்பகத்துக்கு என்ன செய்யலாம்?ஆலிவ் ஆயில்:
அகில் கட்டையை பசும்பால்விட்டு அரைத்து மார்பில் தடவி ஊறவைத்துக் குளித்து வந்தால் தளர்ச்சியான மார்பகங்கள் அழகான மார்பகங்களாக மாறும். ஆலிவ் ஆயிலும் பலன் தரும். தேவையான அளவு ஆலிவ் ஆயிலை எடுத்துக்கொண்டு சூடு பறக்கத் தேய்க்க வேண்டும். பிறகு சுழற்சி முறையில் மார்பகத்தில் தேய்த்து வந்தால் தொங்கிய மார்பகங்கள் செழுமை பெறும்.

வெள்ளரிக்காயை மிக்ஸியில் அரைத்து அதனுடன் நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக்கரு, ஒரு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்துக் கலந்து மார்பகத்தில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதை வாரம் ஒருமுறை செய்துவந்தால் பலன் கிடைக்கும்.
இதுபோன்று ஏராளமான வழிகள் உள்ளன. எனவே, மார்பகங்கள் சுருங்கிவிட்டது, தொங்கியநிலையில் இருக்கிறது என்றால் மனம் தளராமல் எளிய மருத்துவம் செய்து பலன் பெறுங்கள்.