காங்கிரஸ், இடதுசாரிகளால் முடியாது… மம்தாவால் மட்டும்தான் அந்த கட்சியை தோற்கடிக்க முடியும்

 

காங்கிரஸ், இடதுசாரிகளால் முடியாது… மம்தாவால் மட்டும்தான் அந்த கட்சியை தோற்கடிக்க முடியும்

மேற்கு வங்தக்தில் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளுக்கு பா.ஜ.க.வை எதிர்த்து தனியாக போராட வலிமை கிடையாது. ஆனால் மம்தா பானர்ஜியால் மட்டுமே பா.ஜ.க.வை தோற்கடிக்க முடியும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமைச்சர் தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் பாங்குராவின் ஓண்டாவில் நடந்த பேரணியில் கலந்து கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், அம்மாநில அமைச்சருமான தபஸ் ராய் பேசுகையில் கூறியதாவது: அவர்கள் மேற்கு வங்கத்தை ஆட்சி செய்வோம் என்று கூறுகிறார்கள். உங்கள் ஊர்வலத்தில் அரூப் கான் (ஓன்டா திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.) கலந்து கொள்வார் என்று காங்கிரஸ் மற்றும் இடதுசாரி தலைவர்களிடம் நான் சொல்ல விரும்புகிறேன்.

காங்கிரஸ், இடதுசாரிகளால் முடியாது… மம்தாவால் மட்டும்தான் அந்த கட்சியை தோற்கடிக்க முடியும்
இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணி

காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளால் பா.ஜ.க.வை தடுக்க முடியாது. உங்களது குறைந்து வரும் ஆற்றலால் இது சாத்தியமில்லை என்பதையும் நீங்கள் அறிவீர்கள். அதனால்தான் நீங்கள் இருவரும் ஒன்றாக (கூட்டணி) வந்துள்ளீர்கள். மம்தா பானர்ஜியை நிறுத்த வேண்டாம்.

காங்கிரஸ், இடதுசாரிகளால் முடியாது… மம்தாவால் மட்டும்தான் அந்த கட்சியை தோற்கடிக்க முடியும்
பா.ஜ.க.

கால்வாயை வெட்டி முதலைகளை கொண்டு வர வேண்டாம். கபாலிக் சக்தியை (பா.ஜ.க.) எதிர்க்கும் வலிமை உங்களிடம் இல்ல என்பதையும் நீங்கள் அறிவீர்கள். அதனை செய்ய முடிந்தவரின் பெயர் மம்தா பானர்ஜி. அனைத்து பா.ஜ.க. தலைவர்களும் அவருக்கு (மம்தா பானர்ஜிக்கு) பயப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.