#WeLoveDoctors மனித கடவுள்களான மருத்துவர்களுக்கு ரொம்ப நன்றி! சிவகார்த்திகேயனின் நெகிழ்ச்சி பதிவு

 

#WeLoveDoctors மனித கடவுள்களான மருத்துவர்களுக்கு ரொம்ப நன்றி! சிவகார்த்திகேயனின் நெகிழ்ச்சி பதிவு

நடிகர் சிவகார்த்திகேயன் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், “எல்லாருக்கும் வணக்கம், நான் சிவகார்த்திகேயன் பேசுறேன். இன்னும் கொஞ்சம் காலம். நம் விதிமுறைகளை சரியாக பின்பற்றினால் ஊரடங்கும் கொரோனா பிரச்னையும் விரைவில் முடிந்துவிடும் என நம்புகிறேன். வீட்டிலே இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். பெரியவர்களையும் குழந்தைகளையும் பத்திரமா பாத்துக்கொங்க… நமக்காக வெளியில் உழைத்துக்கொண்டிருக்கிற அரசு, அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், ஊடகத்துறை நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. இவர்களோடு சேர்த்து இன்னொருவருக்கும் நன்றி சொல்ல வேண்டிய தருணம் இது. அவர்களோட உயிர், வாழ்க்கை, குடும்பம் போன்றவற்றை பார்க்காமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வெளியே வந்து சேவை செய்பவர்கள் மருத்துவர்கள். மனித கடவுள்களான அவர்களுக்கு பெரிய சல்யூட்… 

 

 

மருத்துவர்கள் மேல் நமக்கு நிறைய அன்பும் மரியாதையும் இருக்கிறது என்பதை காட்டவே இந்த வீடியோ மேலும் இந்த  #WeLoveDoctors ஹேஷ்டேக். சமீபத்தில் வந்த செய்திகள் மருத்துவர்களை காயப்படுத்தியிருக்கும். கொரோனாவை பார்த்து பயப்படாமல் நமக்காக உழைக்கும் மருத்துவர்களுக்காக நாம் இருக்கிறோம் என்பதை சொல்ல வேண்டிய தருணம். இதனால் நீங்களும் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய அன்பையும், நன்றியை இந்த ஹேஷ்டேக்கில் வீடியோவாக பதிவிடுங்கள்” என தெரிவித்துள்ளார்.