நலவாரிய முறைகேடு: தஞ்சையில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

 

நலவாரிய முறைகேடு: தஞ்சையில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

நலவாரிய முறைகேடுகளை கண்டித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு தொழிற் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நலவாரிய முறைகேடு: தஞ்சையில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு கட்டுமான முறைசாரா தொழிற்சங்கம் சார்பில் நலவாரிய முறைகேடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின்போது, நல வாரியத்தில் நடைபெறும் குளறுபடிகளை முறைப்படுத்தி பழைய முறையிலேயே நலவாரிய பதிவு நடைபெற வேண்டும் . நிலுவையிலுள்ள பென்ஷன், கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை , விபத்து உதவித்தொகை உள்ளிட்ட பல பயன்களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முழக்கங்கள் செய்யப்பட்டன.

நலவாரிய முறைகேடு: தஞ்சையில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

அதை தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.


போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் ஜெயபால், முறைசாரா சங்க மாவட்ட செயலாளர் பேர்நிதி ஆழ்வார், கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் மூர்த்தி சுமைப்பணி சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்