ஆலயங்கள் திறப்புக்கு கிறிஸ்துவ ஊழியர் கூட்டமைப்பினர் வரவேற்பு

 

ஆலயங்கள் திறப்புக்கு கிறிஸ்துவ ஊழியர் கூட்டமைப்பினர் வரவேற்பு

ஈரோடு செப். 1 .
சர்வதேச கிறிஸ்தவ ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது, அந்த அமைப்பின் தலைவர் ஜென்சன் ஜெபராஜ் தலைமையில் ஈரோட்டில் கூட்டம் நடைபெற்றது.

ஆலயங்கள் திறப்புக்கு கிறிஸ்துவ ஊழியர் கூட்டமைப்பினர் வரவேற்பு

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிறிஸ்துவ ஊழியர்களின் சார்பில் தமிழக அரசுக்கும் மற்றும் நோய்த் தடுப்பு பணியில் உயிர் தியாகம் செய்த மருத்துவத் துறை மற்றும் இரவு பகல் பாராது பணி செய்த காவல் துறை துப்புரவு பணியாளர்கள் அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார். தமிழக அரசு அறிவித்திருக்கும் விதிமுறைகளை கடைப்பிடித்து சமூக பரவலை தடுப்போம் என்றும், குழுவாக பாடுவதை தவிர்த்து பதிவு செய்த பாடல்களை ஒலிபரப்பலாம் என முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். 1200 சதுரடியில் 20 பேர் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

ஆலயங்கள் திறப்புக்கு கிறிஸ்துவ ஊழியர் கூட்டமைப்பினர் வரவேற்பு


-ரமேஷ் கந்தசாமி