வெல்கம் பேக் யுவி – மீண்டும் களத்தில் இறங்குகிறாரா யுவராஜ் சிங்!

 

வெல்கம் பேக் யுவி –  மீண்டும் களத்தில் இறங்குகிறாரா யுவராஜ் சிங்!

ஒரு ஓவரின் 6 பந்துகளையும் சிக்ஸருக்கு வீசிய அட்டகாசமான பேட்ஸ்மேன் யுவராஜ் சிங். ஆமாம். யுவராஜ் சிங் பெயரைச் சொன்னதுமே எல்லோரும் நினைவுக்கு வரும் அந்த விளாசல் ஓவர்தான்.

இந்திய கிரிக்கெட் அணியில் அடிக்கடி பிரச்சினை ஏற்படுவது மிடில் ஆர்டர் பேட்டிங்தான். மிகச் சிரமமான பணி அது. அதுவரையில் அணியின் ஸ்கோர், எடுக்க வேண்டிய டார்கெட் ஸ்கோர் இவற்றை மனதில் கொண்டு எந்த வகையான ஆட்டத்தை ஆட வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும். குறிப்பாக, தனக்காக ஆடாமல் அணியின் வெற்றிக்கு மட்டுமே ஆட வேண்டும்.

வெல்கம் பேக் யுவி –  மீண்டும் களத்தில் இறங்குகிறாரா யுவராஜ் சிங்!

இந்திய அணியில் யுவராஜ் சிங் இருந்தவரை மிடில் ஆர்டரில் எந்தத் தொய்வும் இல்லாமல் பார்த்துக்கொண்டார். பல போட்டிகளை சிறப்பாக ஃபினிஷ் செய்தவர்.

2011 ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிக்கான உலககோப்பையை இந்தியா வென்றபோது அந்தத் தொடரின் நாயகனாக விளங்கியவர் யுவராஜ் சிங். பல போட்டிகளில் இந்திய அணி வெல்வதற்கு இவரின் ஆட்டமே காரணமாக இருந்தது.

யுவராஜ் சென்ற ஆண்டில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கடந்த சில மாதங்களாக பஞ்சாப் வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதை மேற்கொண்டார் யுவராஜ் சிங்.

வெல்கம் பேக் யுவி –  மீண்டும் களத்தில் இறங்குகிறாரா யுவராஜ் சிங்!

இப்போது பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்திடமிருந்து உள்ளூர் அணிக்காக விளையாட யுவராஜ் சிங் அழைக்கப்பட்டிருக்கிறார்.

இதனால், அவர் தனது ஓய்வு பெறும் முடிவை திரும்ப பெற வுள்ளார். அதனால், பிசிசிஐக்கு தனது ஓய்வு முடிவை ரத்து செய்யுமாறு கடிதம் எழுதியிருக்கிறார்.

யுவராஜ் சிங் மீண்டும் விளையாடும் வகையில் பிசிசிஐ அவரின் முடிவை ரத்து செய்தாலும், டி20 போட்டிகளில் மட்டுமே இனி யுவராஜ் சிங் ஆட முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.

வெல்கம் பேக் யுவி. உங்களின் அட்டகாசமான ஆட்டத்தைக் காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.