பொய் சொல்லி ‘கடைசி நேரத்தில்’ திருமணத்தை நிறுத்திய பெண் : அதிர்ச்சி தரும் சம்பவம்!

 

பொய் சொல்லி ‘கடைசி நேரத்தில்’ திருமணத்தை நிறுத்திய பெண் : அதிர்ச்சி தரும் சம்பவம்!

பொய் சொல்லி திருமணத்தை நிறுத்தியதாக இளம்பெண் ஒருவர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் மட்டகண்டி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து தூனேரியைச் சேர்ந்த பிரியதர்ஷினியை பெண் பார்த்த குடும்பம் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தது. இதையடுத்து திருமண நாளில் மணமக்கள் மணக்கோலத்தில் மேடையில் வீற்றிருந்தனர்.

பொய் சொல்லி ‘கடைசி நேரத்தில்’ திருமணத்தை நிறுத்திய பெண் : அதிர்ச்சி தரும் சம்பவம்!

படுகர் இன மரபுப்படி, மணமேடையில் மணப்பெண் 3 முறை சம்மதம் தெரிவித்த பின்பே தாலிகட்ட வேண்டும். ஆனால் பிரியதர்ஷினி மூன்றாவது முறை கேட்ட போது மணமகனை பிடிக்கவில்லை என்றும் தான் விரும்பும் ஒருவர், ஒரு மணி நேரத்தில் வந்து விடுவார் என்று கூறியவாறு அங்கிருந்து சென்றார். திருமணம் நின்றுவிட்டதை நம்பமுடியாமல் மணமகன் அதிர்ச்சியில் உறைந்து போனார். இதையடுத்து அந்த பெண் வீட்டைவிட்டு சென்றுவிட்டதாகவும்,காதலனை தேடி சென்னை வந்தததாகவும் தகவல்வெளியானது.

பொய் சொல்லி ‘கடைசி நேரத்தில்’ திருமணத்தை நிறுத்திய பெண் : அதிர்ச்சி தரும் சம்பவம்!

இந்நிலையில் இளம்பெண் பிரியதர்ஷினி ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தான் எங்கும் செல்லவில்லை. பெற்றோருடன் தான் இருக்கிறேன். எனக்கு பார்த்த மாப்பிளை மீது பல தவறான புகார்கள் வந்தன. அதனால் தான் பொய் சொல்லி திருமணத்தை நிறுத்தினேன் என்று கூறியதுடன் அவர் வீட்டில் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.